• May 03 2026

ஜனாதிபதியை சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Chithra / Feb 3rd 2026, 12:59 pm
image


சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று, இன்று (03) காலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர்.

தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடனேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்று வழங்கப்பட்ட போதிலும், தமது உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினத்திலும் தொடரும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் 9 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், ஆசிரியர் சேவை அரசியலமைப்பிற்கு முரணாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளக் கூடாது என கல்வி தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளை முன்னெடுத்து வரும் தங்களை துரிதமாக ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 9 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட 7 பேரில் 6 பேரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர்கள் பல சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியை சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று, இன்று (03) காலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர்.தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடனேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்று வழங்கப்பட்ட போதிலும், தமது உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினத்திலும் தொடரும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க தெரிவித்துள்ளார்.கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் 9 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றது.எவ்வாறாயினும், ஆசிரியர் சேவை அரசியலமைப்பிற்கு முரணாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளக் கூடாது என கல்வி தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளை முன்னெடுத்து வரும் தங்களை துரிதமாக ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 9 ஆவது நாளாகவும் தொடர்கிறது.கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட 7 பேரில் 6 பேரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர்கள் பல சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement