மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (28) மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டியானது (Heat Index) சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்திற்கு' (Caution Level) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசைப்பிடிப்புக்கு (Heat cramps) வழிவகுக்கும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதியளவு நீரை அருந்துமாறும், கடினமான வெளிப்புற வேலைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக சிறியவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நண்பல் வேளையில் மட்டக்களப்பு நகரின் முக்கியமான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
பொதுமக்கள் இந்த உஷ்ணத்தை எதிர்கொள்ளும் முகமாக இளநீர், சர்பத், தயிர் போன்ற குளிர் பானங்களை பருகுவதை காணக் கூடியதாக உள்ளது. இந்நிலையில் குளிர்பான வியாபாரங்கள் களைகட்டியுள்ளதையும் காணமுடிகின்றது.
நாட்டில் 'எச்சரிக்கை மட்டத்திற்கு' அதிகரித்த வெப்பநிலை; களைகட்டும் குளிர்பான வியாபாரங்கள் மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை (28) மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டியானது (Heat Index) சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்திற்கு' (Caution Level) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசைப்பிடிப்புக்கு (Heat cramps) வழிவகுக்கும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் போதியளவு நீரை அருந்துமாறும், கடினமான வெளிப்புற வேலைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக சிறியவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று நண்பல் வேளையில் மட்டக்களப்பு நகரின் முக்கியமான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.பொதுமக்கள் இந்த உஷ்ணத்தை எதிர்கொள்ளும் முகமாக இளநீர், சர்பத், தயிர் போன்ற குளிர் பானங்களை பருகுவதை காணக் கூடியதாக உள்ளது. இந்நிலையில் குளிர்பான வியாபாரங்கள் களைகட்டியுள்ளதையும் காணமுடிகின்றது.