இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ஏர்வாடி வரையுள்ள பாக் சலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ONGC நிறுவனத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது.
இது மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிட்டு தேசிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் சே.நல்லதம்பி தெரிவித்துள்ளதாவது,
இராமநாதபுரம் மாவட்டத்தில் 208 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பல லட்சம் மீனவர்கள் கடலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.
பல்வேறு காரணங்களால் கடலில் மீன்வளம் குறைந்து வருகிறது. இதனால் இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித்தொழில் நலிந்து வருகிறது. மேலும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பல்வேறு இன்னலுக்கு ஆளாகி இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கேள்விகுறியாகி வருகிறது.
கடலில் மீத்தேன் கிணறுகள் அமைப்பது மற்றும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பது குறித்து கருத்துக்கேட்கும் கூட்டங்களில் இராமநாதபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தற்போது தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது மக்கள் விரோத செயலாகும். இதை உடனடியாக தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் ONGC நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள 20 ஹட்ரோகார்பன் கிணறுகளுக்கான தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.என்றார்.
இராமநாதபுரம் - மன்னார் வரை ஹைட்ரோகார்பன் கிணறுகள்; அனுமதி வழங்கிய தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு மீனவர்கள் எதிர்ப்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ஏர்வாடி வரையுள்ள பாக் சலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ONGC நிறுவனத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிட்டு தேசிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் சே.நல்லதம்பி தெரிவித்துள்ளதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் 208 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பல லட்சம் மீனவர்கள் கடலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் கடலில் மீன்வளம் குறைந்து வருகிறது. இதனால் இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித்தொழில் நலிந்து வருகிறது. மேலும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பல்வேறு இன்னலுக்கு ஆளாகி இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கேள்விகுறியாகி வருகிறது.கடலில் மீத்தேன் கிணறுகள் அமைப்பது மற்றும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பது குறித்து கருத்துக்கேட்கும் கூட்டங்களில் இராமநாதபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தற்போது தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது மக்கள் விரோத செயலாகும். இதை உடனடியாக தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் ONGC நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள 20 ஹட்ரோகார்பன் கிணறுகளுக்கான தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.என்றார்.