• Apr 28 2026

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் பலி! ஒருவர் கைது

Chithra / Feb 20th 2026, 9:02 am
image

 

மஹியங்கனை - மெதஓயா பகுதியில் நேற்று மதியம்  மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட மின்சார கம்பி தாக்கியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இவ்வாறு, சட்டவிரோதமாக மின்சார கம்பிகளை கட்டியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் பலி ஒருவர் கைது  மஹியங்கனை - மெதஓயா பகுதியில் நேற்று மதியம்  மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட மின்சார கம்பி தாக்கியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இவ்வாறு, சட்டவிரோதமாக மின்சார கம்பிகளை கட்டியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement