• Feb 01 2026

தடை செய்யப்பட்ட சிங்கி இறால்களுடன் ஒருவர் கைது!

shanuja / Jan 31st 2026, 2:19 pm
image

பேருவளை, மருதான பிரதேசத்தில் சிறிய அளவிலான சிங்கி இறால்களைப் பிடித்து வெளிநாட்டுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


மீன்பிடி, நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே பிடிக்கத் தடைசெய்யப்பட்ட சிறிய சிங்கி இறால்கள் மற்றும் முட்டையிடும் சிங்கி இறால்கள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இந்த மோசடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

தடை செய்யப்பட்ட சிங்கி இறால்களுடன் ஒருவர் கைது பேருவளை, மருதான பிரதேசத்தில் சிறிய அளவிலான சிங்கி இறால்களைப் பிடித்து வெளிநாட்டுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி, நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே பிடிக்கத் தடைசெய்யப்பட்ட சிறிய சிங்கி இறால்கள் மற்றும் முட்டையிடும் சிங்கி இறால்கள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த மோசடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement