• Apr 21 2026

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமருக்கு எதிரான ஆட்சேபனை நிராகரிப்பு!

Ziya / Apr 21st 2026, 3:51 pm
image

எதிர்வரும் தேசிய ஒலிம்பிக் கொமிட்டி தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற ஒரு முக்கிய முன்னேற்றமாக, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரின் வேட்புமனுவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் சுயாதீன தேர்தல் குழு உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.


இந்த முடிவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், ஆசிய ஒலிம்பிக் பேரவையிடமிருந்து கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம், ஜஸ்வர் உமர்  சர்வதேச ஒலிம்பிக் கொமிட்டி அல்லது ஆசிய ஒலிம்பிக் பேரவையினால் எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன் மூலம் அவரது தகைமைகள் குறித்த சந்தேகங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.


இந்த வார தொடக்கத்தில், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஜஸ்வர் உமரின்  வேட்புமனுவுக்கு எதிராக பிரிதிவிராஜ் பெரேரா, முகமது ரிஃப்டி ஃபஹ்மி மற்றும் சுனில் சேனவீர ஆகியோரால் மூன்று ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


அதற்குப் பதிலளிக்கும் வகையில், சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச விளையாட்டுச் சட்டம் மற்றும் நடுவர் மன்ற விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சட்ட நிறுவனம் ஊடாக ஜஸ்வர் உமர் முழுமையான எதிர்ப்பு ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தார்.


கிடைக்கப்பெற்ற அனைத்து எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களையும் விரிவாகப் பரிசீலித்த பின்னர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்திரசிறி தலைமையிலான தேர்தல் குழு, நீதியரசர் பியசேன ரணசிங்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர ஆகியோருடன் இணைந்து அந்த ஆட்சேபனைகளை நியாயமான அடிப்படையில் நிராகரித்துள்ளது.


தேர்தல் செயல்முறை முழுவதும், ஆசிய ஒலிம்பிக் பேரவையானது தற்போதைய  தேசிய ஒலிம்பிக் கொமிட்டி தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்திற்கு ஒரு காட்டமான கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் இத்தேர்தல் எவ்வித பாகுபாடு அல்லது தேவையற்ற அழுத்தங்கள் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், சட்டச் சிக்கல்கள் அல்லது தேர்தலைத் தாமதப்படுத்தும் முயற்சிகள் ஏற்பட்டால், தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் தானாகவே நீடிக்கப்பட மாட்டாது என்பதையும் அக்கடிதம் தெளிவுபடுத்தியுள்ளது. 

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமருக்கு எதிரான ஆட்சேபனை நிராகரிப்பு எதிர்வரும் தேசிய ஒலிம்பிக் கொமிட்டி தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற ஒரு முக்கிய முன்னேற்றமாக, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரின் வேட்புமனுவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் சுயாதீன தேர்தல் குழு உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.இந்த முடிவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், ஆசிய ஒலிம்பிக் பேரவையிடமிருந்து கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம், ஜஸ்வர் உமர்  சர்வதேச ஒலிம்பிக் கொமிட்டி அல்லது ஆசிய ஒலிம்பிக் பேரவையினால் எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் அவரது தகைமைகள் குறித்த சந்தேகங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.இந்த வார தொடக்கத்தில், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஜஸ்வர் உமரின்  வேட்புமனுவுக்கு எதிராக பிரிதிவிராஜ் பெரேரா, முகமது ரிஃப்டி ஃபஹ்மி மற்றும் சுனில் சேனவீர ஆகியோரால் மூன்று ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.அதற்குப் பதிலளிக்கும் வகையில், சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச விளையாட்டுச் சட்டம் மற்றும் நடுவர் மன்ற விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சட்ட நிறுவனம் ஊடாக ஜஸ்வர் உமர் முழுமையான எதிர்ப்பு ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தார்.கிடைக்கப்பெற்ற அனைத்து எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களையும் விரிவாகப் பரிசீலித்த பின்னர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்திரசிறி தலைமையிலான தேர்தல் குழு, நீதியரசர் பியசேன ரணசிங்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர ஆகியோருடன் இணைந்து அந்த ஆட்சேபனைகளை நியாயமான அடிப்படையில் நிராகரித்துள்ளது.தேர்தல் செயல்முறை முழுவதும், ஆசிய ஒலிம்பிக் பேரவையானது தற்போதைய  தேசிய ஒலிம்பிக் கொமிட்டி தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்திற்கு ஒரு காட்டமான கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் இத்தேர்தல் எவ்வித பாகுபாடு அல்லது தேவையற்ற அழுத்தங்கள் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், சட்டச் சிக்கல்கள் அல்லது தேர்தலைத் தாமதப்படுத்தும் முயற்சிகள் ஏற்பட்டால், தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் தானாகவே நீடிக்கப்பட மாட்டாது என்பதையும் அக்கடிதம் தெளிவுபடுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement