• Jan 19 2026

போதிய பேருந்துகள் சேவையில் இல்லை! கொழும்பு செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்

Chithra / Jan 18th 2026, 3:22 pm
image


பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் சொந்த இடங்களுக்கு சென்றிருந்த பலர், கொழும்புக்குத் திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18)  காத்திருந்ததால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.


ஹட்டன் பேருந்து நிலையத்தில் காலை  காத்திருந்த பயணிகள், பேருந்துகள் போதியளவு சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவித்தனர். 


வழக்கமாக பண்டிகை காலங்களில் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் அதிக பயணிகள் வருகை தருவார்கள் என தெரிந்தும் போதுமான பேருந்துகள் இல்லை என குற்றம் சுமத்துகின்றனர்.


பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் உள்ளிட்ட இடங்களுக்குத் திரும்புவதற்காக விசேட பேருந்து சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 


ஆனால் போதியளவில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியதோடு ஹட்டன் மத்திய பிரதான பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நீண்ட நேரம் தூர சேவை பேருந்துகள் இன்மையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


ஒரே நேரத்தில் இவ்வாறு அதிக பயணிகள் பயணம் மேற்கொள்ளும் காலங்களில் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.


போதிய பேருந்துகள் சேவையில் இல்லை கொழும்பு செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் சொந்த இடங்களுக்கு சென்றிருந்த பலர், கொழும்புக்குத் திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18)  காத்திருந்ததால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.ஹட்டன் பேருந்து நிலையத்தில் காலை  காத்திருந்த பயணிகள், பேருந்துகள் போதியளவு சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவித்தனர். வழக்கமாக பண்டிகை காலங்களில் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் அதிக பயணிகள் வருகை தருவார்கள் என தெரிந்தும் போதுமான பேருந்துகள் இல்லை என குற்றம் சுமத்துகின்றனர்.பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் உள்ளிட்ட இடங்களுக்குத் திரும்புவதற்காக விசேட பேருந்து சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ஆனால் போதியளவில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியதோடு ஹட்டன் மத்திய பிரதான பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நீண்ட நேரம் தூர சேவை பேருந்துகள் இன்மையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.ஒரே நேரத்தில் இவ்வாறு அதிக பயணிகள் பயணம் மேற்கொள்ளும் காலங்களில் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement