• Apr 14 2026

நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!

Ziya / Feb 9th 2026, 5:24 pm
image

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


ஈரான் நாட்டைச் சோ்ந்த நா்கீஸ் முகமதி (53), அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் 


ஈரானில் ஹிஜாப் அணியாததால் பொலிஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாஷா அமீனி (22) என்ற பெண் உயிரிழந்தார்.


இதையடுத்து, அந்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.


போராட்டத்துக்கு நர்கீஸ் முகமதி சிறையில் இருந்தே ஆதரவு திரட்டினார். 


இதனால் அவரது புகழ் மேலும் அதிகரித்தது.


கடந்த 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது.


அதேவேளை அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 19 ஆவது பெண் மற்றும் ஈரானின் 2 ஆவது பெண் ஆவாா் நர்கீஸ் முகமதி.


இந்நிலையில், கடந்த 2 ஆம் திகதியிலிருந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தச் செயலுக்காக நா்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஈரான் அரசு உத்தரவிட்டது.

நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஈரான் நாட்டைச் சோ்ந்த நா்கீஸ் முகமதி (53), அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் ஈரானில் ஹிஜாப் அணியாததால் பொலிஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாஷா அமீனி (22) என்ற பெண் உயிரிழந்தார்.இதையடுத்து, அந்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.போராட்டத்துக்கு நர்கீஸ் முகமதி சிறையில் இருந்தே ஆதரவு திரட்டினார். இதனால் அவரது புகழ் மேலும் அதிகரித்தது.கடந்த 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது.அதேவேளை அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 19 ஆவது பெண் மற்றும் ஈரானின் 2 ஆவது பெண் ஆவாா் நர்கீஸ் முகமதி.இந்நிலையில், கடந்த 2 ஆம் திகதியிலிருந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தச் செயலுக்காக நா்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஈரான் அரசு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement