• Jun 24 2025

திருகோணமலை மாநகர சபைக்கு புதிய முதல்வர் – இ.த.க. வேட்பாளர் செல்வராஜா தெரிவு!

Thansita / Jun 23rd 2025, 7:08 pm
image

திருகோணமலை மாநகரசபையின் முதல்வராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா  இன்று 23ம் திகதி இடம்பெற்ற அமர்வில் தெரிவு செய்யப்பட்டார்.!

திருகோணமலை நகரசபையானது மாநகரசபையாக தரமுயர்தப்பட்டு முதலாவது சபை அமர்வானது இன்று 23ம் திகதி மாலை 2.00 மணிக்கு இடம்பெற்றது.

இவ் அமர்ப்பிற்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி    தலைமை தாங்கினார்.

மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கு எந்த ஒரு கட்சியும் அதற்குறிய 50 வீதம் கோரத்தை  கொண்டிருக்காத நிலையில் முதல்வர் தெரிவு இடம் பெற்றது.

தெரிவு இடம்பெற்ற போது..

 இலங்கை தமிழசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாநகரசபை சிவபுரி வட்டாரத்தின் சார்பில் தெரிவு செய்யபட்ட கந்தசாமி செல்வராஜா அவர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பாக அபயபுர வட்டார தேசிய மக்கள் சக்தியின்  உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத்   ஆகிய இருவரின் பெயர்கள் பிரேரிக்கபட்ட சந்தர்ப்பத்தில் .

சபையில் இருந்த 25 உறுப்பினர்களும் திறந்த வாக்கெடுப்புக்கு கோரியதனால்.திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி சாரப்பில் பிரேரிக்கப்ட்ட கந்தசாமி செல்வராஜா 19 வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தி  உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத்   06 வாக்குகளையும் பெற்றார். 

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா திருகோணமலை மாநகரசபையின் கௌரவ முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

இதே வேலை உப முதல்வராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் முகமட் மெளசூம் இவர்கள் சபையில் ஏகமானதாக தெரிவு செய்யப்படார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருகோணமலை மாநகர சபைக்கு புதிய முதல்வர் – இ.த.க. வேட்பாளர் செல்வராஜா தெரிவு திருகோணமலை மாநகரசபையின் முதல்வராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா  இன்று 23ம் திகதி இடம்பெற்ற அமர்வில் தெரிவு செய்யப்பட்டார்.திருகோணமலை நகரசபையானது மாநகரசபையாக தரமுயர்தப்பட்டு முதலாவது சபை அமர்வானது இன்று 23ம் திகதி மாலை 2.00 மணிக்கு இடம்பெற்றது.இவ் அமர்ப்பிற்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி    தலைமை தாங்கினார்.மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கு எந்த ஒரு கட்சியும் அதற்குறிய 50 வீதம் கோரத்தை  கொண்டிருக்காத நிலையில் முதல்வர் தெரிவு இடம் பெற்றது.தெரிவு இடம்பெற்ற போது. இலங்கை தமிழசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாநகரசபை சிவபுரி வட்டாரத்தின் சார்பில் தெரிவு செய்யபட்ட கந்தசாமி செல்வராஜா அவர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பாக அபயபுர வட்டார தேசிய மக்கள் சக்தியின்  உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத்   ஆகிய இருவரின் பெயர்கள் பிரேரிக்கபட்ட சந்தர்ப்பத்தில் .சபையில் இருந்த 25 உறுப்பினர்களும் திறந்த வாக்கெடுப்புக்கு கோரியதனால்.திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி சாரப்பில் பிரேரிக்கப்ட்ட கந்தசாமி செல்வராஜா 19 வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தி  உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத்   06 வாக்குகளையும் பெற்றார். அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா திருகோணமலை மாநகரசபையின் கௌரவ முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.இதே வேலை உப முதல்வராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் முகமட் மெளசூம் இவர்கள் சபையில் ஏகமானதாக தெரிவு செய்யப்படார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement