• Jun 12 2025

பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி ...!

shanuja / Jun 11th 2025, 12:50 pm
image

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை  தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. 


அதன்படி, அந்த மாநகர சபையின்  மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


​மேயர் பதவிக்காக இன்று நடைபெற்ற தேர்தலில் 04 மேலதிக வாக்குகளால் வெற்றுப்பெற்று அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 06 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதேநேரத்தில் சுயேச்சை குழு எண்1, 05 உறுப்புனர்களை கொண்டுள்ளது. 


அதே மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 03 உறுப்பினர்களை கொண்டுள்ளது. அத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் 02 சுயேச்சை குழுக்கள் தலா ஒரு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.


பண்டாரவளை மாநகரசபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் பண்டாரவளை மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி . பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை  தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அதன்படி, அந்த மாநகர சபையின்  மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார். ​மேயர் பதவிக்காக இன்று நடைபெற்ற தேர்தலில் 04 மேலதிக வாக்குகளால் வெற்றுப்பெற்று அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 06 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதேநேரத்தில் சுயேச்சை குழு எண்1, 05 உறுப்புனர்களை கொண்டுள்ளது. அதே மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 03 உறுப்பினர்களை கொண்டுள்ளது. அத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் 02 சுயேச்சை குழுக்கள் தலா ஒரு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.பண்டாரவளை மாநகரசபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் பண்டாரவளை மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement