• Jun 20 2026

நாடு முழுவதும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்!

shanu / Jun 19th 2026, 1:25 pm
image

நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கான விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


​இதன் ஒரு கட்டமாக, வவுனியா மாவட்டத்தைப் பாதுகாப்பதற்கான விசேட ஒழிப்புத் திட்டம், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில், இன்று காலை வவுனியா ஈரட்டபெரியகுளம் பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


​தற்போதைய நிலவரப்படி, வவுனியா பொது வைத்தியசாலையில் 5 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும், ஈரட்டபெரியகுளம் பகுதியில் நோய் பரவக்கூடிய அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.


​இதன் காரணமாகவே, டெங்கு அச்சுறுத்தலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நோக்கில், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் தவிசாளர் சுதர்சன வீரகோன் உட்பட உள்ளூராட்சி பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் இணைந்து குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நாடு முழுவதும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கான விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.​இதன் ஒரு கட்டமாக, வவுனியா மாவட்டத்தைப் பாதுகாப்பதற்கான விசேட ஒழிப்புத் திட்டம், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில், இன்று காலை வவுனியா ஈரட்டபெரியகுளம் பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.​தற்போதைய நிலவரப்படி, வவுனியா பொது வைத்தியசாலையில் 5 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும், ஈரட்டபெரியகுளம் பகுதியில் நோய் பரவக்கூடிய அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.​இதன் காரணமாகவே, டெங்கு அச்சுறுத்தலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நோக்கில், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் தவிசாளர் சுதர்சன வீரகோன் உட்பட உள்ளூராட்சி பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் இணைந்து குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement