• Sep 18 2026

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

Chithra / Sep 18th 2026, 12:57 pm
image


இலங்கை விமான சேவைக்கு எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதில் 10 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, இம்மாதம் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அவரது பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் நீதிவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


சந்தேகநபர் இன்று (18) முற்பகல் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். 


இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ ஆகியோர் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில் இலங்கை விமான சேவைக்கு எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதில் 10 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, இம்மாதம் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவரது பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் நீதிவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (18) முற்பகல் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ ஆகியோர் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement