• Apr 15 2026

மட்டக்களப்பில் இறைச்சிக்கடைகள் மற்று உணவு விற்பனை நிலையங்கள் சோதனை !

Ziya / Apr 14th 2026, 4:41 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் சுகாதார பிரிவினரால் இன்றைய தினம் காலை பல்வேறு இடங்களில் இறைச்சிக்கடைகள் மற்று உணவு விற்பனை நிலையங்கள் சோதனை முன்னெடுக்கப்பட்டது.


மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட இறைச்சி கடையொன்றில்   57.5  கிலோ கிராம் இறந்த கோழிகளின் இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில்  விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் விற்பனையாளருக்கு எதிராக உடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சித்திரை புத்தாண்டு தினத்தை  முன்னிட்டு   இன்று களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இறைசிக் கடைகள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரினால் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது இறைச்சி கடையொன்றினுள்  57.5 கிலோ கிராம் இறந்த கோழிகளின் இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில்  விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து இவ்வாறாக பாவனைக்கு உதவாத இறந்த கோழி  இறைச்சியை குளிர்சாதனப்பட்டியில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபருக்கு எதிராக  களுவாஞ்சிகுடி பிரிவுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன்  விற்பனையாளருக்கு  கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன்  விற்பனையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த வியாபாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத ஐம்பத்தேழு அரை கிலோகிராம் கோழி இறைச்சிகள் அனைத்தும் உடன் அழிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இறைச்சிக்கடைகள் மற்று உணவு விற்பனை நிலையங்கள் சோதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் சுகாதார பிரிவினரால் இன்றைய தினம் காலை பல்வேறு இடங்களில் இறைச்சிக்கடைகள் மற்று உணவு விற்பனை நிலையங்கள் சோதனை முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட இறைச்சி கடையொன்றில்   57.5  கிலோ கிராம் இறந்த கோழிகளின் இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில்  விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் விற்பனையாளருக்கு எதிராக உடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சித்திரை புத்தாண்டு தினத்தை  முன்னிட்டு   இன்று களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இறைசிக் கடைகள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரினால் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது இறைச்சி கடையொன்றினுள்  57.5 கிலோ கிராம் இறந்த கோழிகளின் இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில்  விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இவ்வாறாக பாவனைக்கு உதவாத இறந்த கோழி  இறைச்சியை குளிர்சாதனப்பட்டியில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபருக்கு எதிராக  களுவாஞ்சிகுடி பிரிவுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன்  விற்பனையாளருக்கு  கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன்  விற்பனையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த வியாபாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத ஐம்பத்தேழு அரை கிலோகிராம் கோழி இறைச்சிகள் அனைத்தும் உடன் அழிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement