மட்டக்களப்பு மயிலத்தமடு அறவழிப்போராட்டம் 730 ஆவது நாளாக இன்று சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு - மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப்போராட்டம் 2025 ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 15ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டமே இன்று 730 ஆவது நாளாக சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக மாணவர் ஒன்றியமும் பேராதரவை வழங்கியிருந்தனர்.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே ! அரசே வேடிக்கை பார்க்காதே ! உரிமைக்காக குரல் கொடுப்போம் ! இரண்டு வருடங்கள் கடந்தும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன் , பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல் தரையை வழங்கு என்ற பல்வேறு கோசங்களை எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் இ. சிறிநாத், இ.சாணக்கியன் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மயிலத்தமடு அறவழி போராட்டம் 730 ஆவது நாளாக முன்னெடுப்பு; அரசுக்கெதிராக மட்டக்களப்பில் அணிதிரண்ட மக்கள் மட்டக்களப்பு மயிலத்தமடு அறவழிப்போராட்டம் 730 ஆவது நாளாக இன்று சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு - மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப்போராட்டம் 2025 ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 15ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. குறித்த போராட்டமே இன்று 730 ஆவது நாளாக சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக மாணவர் ஒன்றியமும் பேராதரவை வழங்கியிருந்தனர். இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே அரசே வேடிக்கை பார்க்காதே உரிமைக்காக குரல் கொடுப்போம் இரண்டு வருடங்கள் கடந்தும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன் , பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல் தரையை வழங்கு என்ற பல்வேறு கோசங்களை எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் இ. சிறிநாத், இ.சாணக்கியன் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.