• May 30 2025

மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்..!

Sharmi / May 29th 2025, 9:36 am
image

தேசிய மக்கள் சக்தி சார்பில் இம்முறை இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்தியபிரமாண நிகழ்வு நேற்றைய தினம்(28) மாலை தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது

ஊரின் மறுமலர்சியை நோக்கி எனும் தொணிப்பொருளில் மன்னார் நகரசபை,பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,மாந்தை பிரதேச சபை,முசலி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதுடன் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

குறிப்பாக இம்முறை மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட  11 நபர்கள் நேரடியாக வட்டார ரீதியாக வெற்று பெற்று உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் 8 உறுப்பினர்கள் போனஸ் ஆசனம் மூலம் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வில் பிரதி அமைச்சர் உட்பட பராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்,தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சஜித், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்,வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம். தேசிய மக்கள் சக்தி சார்பில் இம்முறை இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்தியபிரமாண நிகழ்வு நேற்றைய தினம்(28) மாலை தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றதுஊரின் மறுமலர்சியை நோக்கி எனும் தொணிப்பொருளில் மன்னார் நகரசபை,பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,மாந்தை பிரதேச சபை,முசலி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதுடன் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.குறிப்பாக இம்முறை மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட  11 நபர்கள் நேரடியாக வட்டார ரீதியாக வெற்று பெற்று உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் 8 உறுப்பினர்கள் போனஸ் ஆசனம் மூலம் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வில் பிரதி அமைச்சர் உட்பட பராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்,தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சஜித், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்,வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement