• May 30 2025

மாலினி பொன்சேகாவுக்கு அரச மரியாதைக்கு பதிலாக அவமானமே மிஞ்சியது! ரோஹிணி எம்.பி. ஆதங்கம்

Chithra / May 29th 2025, 9:18 am
image


இலங்கையின் சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவுக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை.அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தைத் திருடிய ஒருவர் என்று பாராளுமன்றத்தில் பெயரிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதில் மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகா மிகவும் கவலையடைந்தார்.

முறையாகவே அவர் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணத்தைப் பெற்றார் என்பதற்கான ஆதரங்கள் அவரிடம் இருந்தன.

நிதி உதவிக்கான கோரிக்கை கடிதம், விண்ணப்பக் கடிதம், விண்ணப்பப் படிவம், நிதி ஒப்புதல், விமான டிக்கெட், மருத்துவ பரிந்துரைகள் என்பவை அதன் ஒரு பகுதியாகும்.

இலங்கையில் சிங்கள சினிமாவின் சிறந்த நடிகையை ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பட்டியலிட்டு, அவரை அவமதிக்க வேண்டாம் என நான் பாராளுமன்றத்தில் கூறினேன். இந்த ஆவணங்கள் அதற்கு சான்றாக இருக்கும்.

மாலினியின் உடலும் சாம்பலாக மாறிவிட்டது. 9 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், 2022 ஆம் ஆண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், அதன் விளைவாக அவருக்கு கடுமையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

மாலினிக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கும் நடத்தப்படவில்லை.

அவரே கூறியது போல், அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றார். என தெரிவித்தார். 

மாலினி பொன்சேகாவுக்கு அரச மரியாதைக்கு பதிலாக அவமானமே மிஞ்சியது ரோஹிணி எம்.பி. ஆதங்கம் இலங்கையின் சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவுக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை.அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தைத் திருடிய ஒருவர் என்று பாராளுமன்றத்தில் பெயரிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதில் மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகா மிகவும் கவலையடைந்தார்.முறையாகவே அவர் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணத்தைப் பெற்றார் என்பதற்கான ஆதரங்கள் அவரிடம் இருந்தன.நிதி உதவிக்கான கோரிக்கை கடிதம், விண்ணப்பக் கடிதம், விண்ணப்பப் படிவம், நிதி ஒப்புதல், விமான டிக்கெட், மருத்துவ பரிந்துரைகள் என்பவை அதன் ஒரு பகுதியாகும்.இலங்கையில் சிங்கள சினிமாவின் சிறந்த நடிகையை ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பட்டியலிட்டு, அவரை அவமதிக்க வேண்டாம் என நான் பாராளுமன்றத்தில் கூறினேன். இந்த ஆவணங்கள் அதற்கு சான்றாக இருக்கும்.மாலினியின் உடலும் சாம்பலாக மாறிவிட்டது. 9 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், 2022 ஆம் ஆண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், அதன் விளைவாக அவருக்கு கடுமையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.மாலினிக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கும் நடத்தப்படவில்லை.அவரே கூறியது போல், அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றார். என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement