நீண்டகாலமாக ஏ.ரி.எம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதர, எலி ஹவுஸ் சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் 12.8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெல்ல வீதி, மஹாபாகே, பிலியந்தலை, யக்கல மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய பகுதிகளில் பதிவான ஏ.ரி.எம் அட்டை நிதி மோசடி தொடர்பாக அவர் தேடப்படும் நபர் என்பது கண்டறியப்பட்டது.
மேலும் விசாரணைகளில், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 07 வழக்குகள் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 02 வழக்குகள் தொடர்பாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் மீதான மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்டகால ஏ.ரி.எம் அட்டை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது நீண்டகாலமாக ஏ.ரி.எம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோதர, எலி ஹவுஸ் சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் 12.8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெல்ல வீதி, மஹாபாகே, பிலியந்தலை, யக்கல மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய பகுதிகளில் பதிவான ஏ.ரி.எம் அட்டை நிதி மோசடி தொடர்பாக அவர் தேடப்படும் நபர் என்பது கண்டறியப்பட்டது.மேலும் விசாரணைகளில், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 07 வழக்குகள் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 02 வழக்குகள் தொடர்பாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து சந்தேகநபர் மீதான மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.