போதைப்பொருள் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தென்னாபிரிக்க நாட்டைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குறித்த வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றில் நீதிபதி கவிந்திர நாணயக்கார முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆபத்தான போதைப்பொருள் வைத்திருந்தல், கடத்தல் மற்றும் இறக்குமதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
குறித்த குற்றச்சாட்டுக்களை குற்றவாளி ஒப்புக்கொண்டதையடுத்து நீர்கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கவிந்திர நாணயக்காரவால் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
போதைப்பொருள் வழக்கில் கைதான வெளிநாட்டவருக்கு ஆயுள் தண்டனை போதைப்பொருள் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தென்னாபிரிக்க நாட்டைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். குறித்த வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றில் நீதிபதி கவிந்திர நாணயக்கார முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆபத்தான போதைப்பொருள் வைத்திருந்தல், கடத்தல் மற்றும் இறக்குமதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறித்த குற்றச்சாட்டுக்களை குற்றவாளி ஒப்புக்கொண்டதையடுத்து நீர்கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கவிந்திர நாணயக்காரவால் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.