மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் தென்னாப்பிரிக்கா சிறுத்தை காமினிக்கு மூன்று குட்டிகள் பிறந்துள்ளன.
இதன் மூலம் இந்தியாவில் மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது என இந்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, "குனோ புதிய குட்டிகளை வரவேற்கிறது. இது தென்னாப்பிரிக்கா சிறுத்தைகள் வந்த மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, குனோவில் ஒரு புதிய அத்தியாயமாகும். ஒவ்வொரு பிறப்பும் Project Cheetah திட்டத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தி, இதற்காக பணியாற்றும் கள ஊழியர்கள் மற்றும் கால்நடை குழுக்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது." என தெரிவித்தார்.
இந்த பிறப்பு, இந்தியாவின் Project Cheetah திட்டத்தின் ஒரு வெற்றியாகும்.
இந்த திட்டம் செப்டம்பர் 17, 2022 அன்று தொடங்கப்பட்டு, 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைகளை மீண்டும் நாட்டில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இந்தியாவில் பிறந்த சிறுத்தை குட்டிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து, இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளின் மிக முக்கியமான அடையாளமாகவுள்ளது.
Project Cheetah மூலம் இந்தியா, அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் நாட்டில் பெருக்கி, வனவிலங்கு சமநிலையை பாதுகாக்கும் முன்னோடியான முயற்சியில் முன்னிலை வகிக்கிறது.
குனோ தேசிய பூங்காவில் பிறந்த சிறுத்தை குட்டிகள் https://www.facebook.com/share/v/1CFKisPDgE/மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் தென்னாப்பிரிக்கா சிறுத்தை காமினிக்கு மூன்று குட்டிகள் பிறந்துள்ளன.இதன் மூலம் இந்தியாவில் மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது என இந்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது, "குனோ புதிய குட்டிகளை வரவேற்கிறது. இது தென்னாப்பிரிக்கா சிறுத்தைகள் வந்த மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, குனோவில் ஒரு புதிய அத்தியாயமாகும். ஒவ்வொரு பிறப்பும் Project Cheetah திட்டத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தி, இதற்காக பணியாற்றும் கள ஊழியர்கள் மற்றும் கால்நடை குழுக்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது." என தெரிவித்தார்.இந்த பிறப்பு, இந்தியாவின் Project Cheetah திட்டத்தின் ஒரு வெற்றியாகும்.இந்த திட்டம் செப்டம்பர் 17, 2022 அன்று தொடங்கப்பட்டு, 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைகளை மீண்டும் நாட்டில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தியாவில் பிறந்த சிறுத்தை குட்டிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து, இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளின் மிக முக்கியமான அடையாளமாகவுள்ளது.Project Cheetah மூலம் இந்தியா, அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் நாட்டில் பெருக்கி, வனவிலங்கு சமநிலையை பாதுகாக்கும் முன்னோடியான முயற்சியில் முன்னிலை வகிக்கிறது.