• Jun 29 2025

இலங்கை மின்சாரச் சட்டத் திருத்தம் குறித்து கூட்டு கடிதம் - அரசாங்கம் விசனம்

Chithra / Jun 29th 2025, 9:25 am
image


இலங்கை மின்சாரச் சட்டத் திருத்தம் குறித்த ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ஜைக்கா என்பவற்றின் கூட்டுக் கடிதத்தை அரசாங்கம் கண்டித்துள்ளது.

மின்சாரசபை சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ஜைக்கா என்பவை வலுசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்யும் வகையிலான தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் அந்த கடிதத்துக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்றும் கலாநிதி ஹர்ஷ தெரிவித்திருந்தார். 

இந்நிலையிலேயே அமைச்சர் குமார ஜெயக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'அந்த நிறுவனங்கள் இவ்வாறு செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவற்றின் இந்த கூட்டு கடிதம் இராஜதந்திரமற்ற அணுகுமுறையாகும். அவை இந்த விடயத்தை இதனை விட சிறப்பான இராஜதந்திர ரீதியில் கையாண்டிருக்க வேண்டும்.' என்றார். 

இலங்கை மின்சாரச் சட்டத் திருத்தம் குறித்து கூட்டு கடிதம் - அரசாங்கம் விசனம் இலங்கை மின்சாரச் சட்டத் திருத்தம் குறித்த ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ஜைக்கா என்பவற்றின் கூட்டுக் கடிதத்தை அரசாங்கம் கண்டித்துள்ளது.மின்சாரசபை சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ஜைக்கா என்பவை வலுசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்யும் வகையிலான தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.எவ்வாறிருப்பினும் அந்த கடிதத்துக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்றும் கலாநிதி ஹர்ஷ தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே அமைச்சர் குமார ஜெயக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'அந்த நிறுவனங்கள் இவ்வாறு செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவற்றின் இந்த கூட்டு கடிதம் இராஜதந்திரமற்ற அணுகுமுறையாகும். அவை இந்த விடயத்தை இதனை விட சிறப்பான இராஜதந்திர ரீதியில் கையாண்டிருக்க வேண்டும்.' என்றார். 

Advertisement

Advertisement

Advertisement