• May 09 2025

தமிழ் தேசியக் கொள்கை சார்ந்து செயற்பட கூடியவர்கள் ஒன்றிணைவது அவசியம்: சிறிநேசன் சுட்டிக்காட்டு..!

Sharmi / May 8th 2025, 11:59 am
image

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற உள்ளுராட்சி சபைகளில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படும் அதேவேளை இந்த தேர்தலில் கற்றுக் கொண்ட பாடங்கள் படிப்பினைகளை வைத்து இனிவரும் தேர்தல்களில் நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்றையதினம் இட்ம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சர்ச்சைக்குரிய இந்த பிரதிநிதித்துவ முறையின் கீழ் வட்டார முறை தேர்வு விகிதாசார தேர்வு, அத்தோடு தொங்கு நிலையான நிலைமையும் சில இடங்களில் காணப்படுகின்றன.

வவுணதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள 10 வட்டாரங்களையும் தமிழரசு கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது.

அதேபோன்று வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற 10 தமிழ் வட்டாரங்களையும் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது.

செங்கலடி பிரதேசத்தில் காணப்படுகின்ற 14 வட்டாரங்களில் 13 வட்டாரங்களை எமது கட்சி வெற்றி கொண்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையில் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை எமது கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மண்முனை பற்று பிரதேசத்தில் தமிழ் மக்கள் வாழ்கின்ற 8 வட்டாரங்கள் காணப்படுகின்றன அதில் 6 வட்டாரங்களை எமது கட்சி வெற்றிவாகைசூடி உள்ளது. அதேபோன்று பத்துக்கு ஏழு, பத்து எட்டு, பத்துக்கு ஆறு, பத்து ஐந்து, என்ற அடிப்படையில் எமது கட்சி ஏனைய உள்ளுராட்சி சபைகளில் வெற்றிவாகைசூடி இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது மட்டக்களப்பு மாவட்டம் தமிழரசு கட்சி முன்னிலையில் காணப்படுகிறது. அதுபோன்று அதிகளவான ஆசனங்களை மட்டக்களப்பில் தமிழரசு கட்சி பெற்றிருக்கின்றது.

எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தமிழரசி கட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது. 

அதுபோன்று யாழ்ப்பாணம் , வன்னி, திருகோணமலை, அம்பாறை போன்ற பிரதேசங்களிலும் எமது தமிழரசு கட்சி அதிகளவான ஆசனங்களை பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திசைகாட்டி சின்னம் ஒரு ஆசனத்தையும் எமது கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றிருந்தது.

ஆனாலும் தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெரும் வாரியான ஆசனங்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை. பட்டியலுக்கு ஊடாகவும், சில வட்டாரங்களுக்கூடாகவும் மாத்திரம் ஒரு சில ஆசனங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அதேபோன்று தென்னிலங்கை கட்சியாக காணப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன போன்ற பல கட்சிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. 

எனவே பாராளுமன்றத்திலும் எமது மாவட்ட மக்கள் தமிழரசுக் கட்சியை வெற்றிபெற வைத்திருக்கின்றார்கள். அதுபோல் உள்ளுராட்சி மன்றத்திலும் எனது மக்கள் நமது கட்சியை வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள்.

எமது கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனேகமாக வெற்றி பெற்றிருக்கின்றார். ஆனாலும் ஒரு சில இடத்தில் தோல்வி அடைந்திருக்கின்றார்கள். அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அது வேட்பாளரின் தெரிவின் போது மிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகின்றார்கள், மக்கள் வாக்குகளில் எவ்வளவு தூரம் அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது தொடர்பில் வேட்பாளர்களை கவனம் செலுத்தி தேர்வு செய்கின்ற போது நாம் சுமூகமான வெற்றிகளை பெறமுடியும்.

கற்றுக் கொண்ட பாடங்கள் படிப்பினைகளை வைத்து இனிவரும் தேர்தல்களில் நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். சில வட்டாரங்களில் எமது கட்சியினர் தோல்வியடைந்திருக்கின்றார்கள் அவ்வாறான வேட்பாளர்கள் எதிர்காலத்தில் மிகவும் உன்னிப்பாக அடையாளம் காணப்பட்டு சரியான வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

ஆளும் கட்சியாக இருக்கின்ற கட்சிகள் எப்போதும் தங்களுடைய அதிகார பலத்தினாலும், அதில் வரும் அபிவிருத்தி எனப்படுகின்ற மாயை ஊடாகவும், வருகின்ற மாகாண சபை தேர்தல் செல்வாக்கு செலுத்துவதற்கு அவர்கள் முற்படுகின்றார்கள். தமது கட்சி அதிகாரத்தை பெற்றால் கண்ணை மூடிக்கொண்டு அபிவிருத்திக்காக நிதிகளை அனுப்ப முடியும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவ்வாறான சில போதனைகள் காணப்படுகின்ற காரணத்தினால் உரிமை சார்ந்த அரசியலில் அக்கறையீனமாக காணப்படுகின்ற சிலர் ஒரு சில வட்டாரங்களில் தேசிய மக்கள் சக்தியை வெற்றி கொள்ள செய்திருக்கின்றார்கள்.

இது ஆளுங்கட்சியில் இருக்கின்றவர்களுக்கு இவ்வாறான ஒரு சில வட்டாரங்கள் சாதகமாக அமைந்திருக்கின்றன.

விமர்சனங்களோடு மாத்திரம் நின்று விடாமல் எமது பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றி காணப்படுகின்ற இடங்களில் கல்விசார அபிவிருத்திகள் பௌதிகவளம் சார்ந்த செயற்பாடுகள், போன்றவற்றை முன்னெடுக்கப்படும் இடத்தில் பங்களிப்புகளை சரியானவர்களிடம் கொடுக்கின்ற போது அவர்கள் வீண்விரயம் இல்லாமல் அபிவிருத்தியை அந்தந்த பிரதேசங்களில் செய்ய முடியும் என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

குடிநீர் வழங்குதல் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான படிப்பகங்களை அமைத்தல் பாடசாலைகளுக்கு உதவி செய்தல், சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற பல உதவிகளை மேற்கொள்ளுகின்ற போது இவ்வாறான விடயங்களுக்கும் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற எமது உறவுகள் உதவிகளை மேற்கொள்கின்ற இடத்தில் எமது சமூகத்தை மேலும் துரிதமாக வளர்த்துக் கொள்வதற்கு உரிய பங்களிப்பாக இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது இலங்கை தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளிலிருந்து வித்தியாசமாக செயற்படுவதில் பல பண்புகள் காணப்படுகின்றன. அந்த விதத்தில் ஊழல் மோசடி இலஞ்சம், வீண்விரயம், இல்லாமல் பிரதேச சபைகளை வழி நடத்தக்கூடியவர்களாக இருப்பவர்களை நாம் தவிசாளர், உப தவிசாளர், பதவிகளுக்கு தெரிவு செய்வதற்காக சிந்தித்து இருக்கின்றோம். இதைவிட ஏனைய சபைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் செயற்படக்கூடியவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்.

அவ்வாறானவர்கள் சுயநலம் குறைந்தவர்களாகவும் பொதுநலத்தில் அதிக அக்கறை காட்டக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதேபோன்று ஏனைய சக உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொண்டு பக்குவம் உடையவர்களாகவும் செயற்பட கூடியவர்களாக இருக்க வேண்டும்.

உள்நாட்டு நிதியையும் புலம்பெயர் மக்களின் நிதியையும் பெற்றுக்கொண்டு அபிவிருத்தியை அந்த மக்களுக்காக செய்யக்கூடிய ஒரு ஆளுமையுள்ளவர்களாகவும் அமைபவர்களாகவாறான பதவிகளுக்கு வைக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்..

குறிப்பாக தவிசாளர்களாக வருகின்றவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற பதவிக்காலத்தின் போது அர்ப்பணிப்புடன் பணியாற்றி தங்களுடைய பிரதேச சபையை ஒரு முன்மாதிரியான பிரதேசபையாக மாற்றக் கூடியவர்களாகவும் தங்களுக்கு கிடைத்திருக்கின்ற அதிகாரம் நிதி பலம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அபிவிருத்திகளை செய்து ஒரு மாறாத இடத்தை பிடிக்கக் கூடிய அளவிற்கு தலைவர் காணப்பட வேண்டும். அவர்கள் ஏனைய காட்சிகளைப் போன்று அல்லாமல் ஆளுமை உள்ள தலைவர்களாக செயல்பட வேண்டும்.

எனினும்; எம்மால் ஒரு சில உள்ளுராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை காணப்படுகிறன. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

இந்நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கட்சியாக இருக்கின்றதனால் அதிகளவான வரையில் தமிழ் தேசியக் கொள்கை சார்ந்து செயற்பட கூடியவர்களுடன் நாம் உடன்பாடுகளுடன் செயல்படுவது நல்லது. அதேவேளை சில கட்சிகளுக்கும் சில பிரதேச சபைகளில் எங்களுடைய உதவிகளும் தேவைப்படுகின்றன.

 அதேபோன்று எங்களுடைய கட்சியின் உதவிகளும், ஒருசில் கட்சிகளுக்கு ஏனை உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தேவைப்படுகின்றன. இந்நிலையில் பரஸ்பரம் நாங்கள் கலந்தாலோசித்து செயற்பட வேண்டி உள்ளது. சில சபைகளில் முஸ்லிம் மக்கள் தெளிவாக வாழ்கின்ற பிரதேசங்களில் எங்களுடைய தமிழரசு கட்சியின் ஆதரவு அவர்களுக்கு தேவையாக இருக்கின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பிரதேச சபைகளில் முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையாக இருக்கின்றது.

எனவே இவ்விடத்தில் பரஸ்பரமும் இரு பக்கங்களும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

விடையத்தில் மிகவும் பேரினவாத கட்சியாக காணப்படுகின்ற அல்லது அவர்களுக்கு அடிவருடிகளாக காணப்படுகின்றவர் களுடன் நாங்கள் சேர்ந்து கொள்வதில் நாங்கள் அக்கறை காட்டவில்லை. எனவே நாங்கள் தமிழ் தேசியத்துடன் பயணிக்கின்ற கட்சிகளுடன் இணைந்து அவர்கள் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் சிந்திக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்

தமிழ் தேசியக் கொள்கை சார்ந்து செயற்பட கூடியவர்கள் ஒன்றிணைவது அவசியம்: சிறிநேசன் சுட்டிக்காட்டு. தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற உள்ளுராட்சி சபைகளில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படும் அதேவேளை இந்த தேர்தலில் கற்றுக் கொண்ட பாடங்கள் படிப்பினைகளை வைத்து இனிவரும் தேர்தல்களில் நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் இன்றையதினம் இட்ம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்ச்சைக்குரிய இந்த பிரதிநிதித்துவ முறையின் கீழ் வட்டார முறை தேர்வு விகிதாசார தேர்வு, அத்தோடு தொங்கு நிலையான நிலைமையும் சில இடங்களில் காணப்படுகின்றன.வவுணதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள 10 வட்டாரங்களையும் தமிழரசு கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. அதேபோன்று வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற 10 தமிழ் வட்டாரங்களையும் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. செங்கலடி பிரதேசத்தில் காணப்படுகின்ற 14 வட்டாரங்களில் 13 வட்டாரங்களை எமது கட்சி வெற்றி கொண்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையில் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை எமது கட்சி வெற்றி பெற்றுள்ளது. மண்முனை பற்று பிரதேசத்தில் தமிழ் மக்கள் வாழ்கின்ற 8 வட்டாரங்கள் காணப்படுகின்றன அதில் 6 வட்டாரங்களை எமது கட்சி வெற்றிவாகைசூடி உள்ளது. அதேபோன்று பத்துக்கு ஏழு, பத்து எட்டு, பத்துக்கு ஆறு, பத்து ஐந்து, என்ற அடிப்படையில் எமது கட்சி ஏனைய உள்ளுராட்சி சபைகளில் வெற்றிவாகைசூடி இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது மட்டக்களப்பு மாவட்டம் தமிழரசு கட்சி முன்னிலையில் காணப்படுகிறது. அதுபோன்று அதிகளவான ஆசனங்களை மட்டக்களப்பில் தமிழரசு கட்சி பெற்றிருக்கின்றது. எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தமிழரசி கட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது. அதுபோன்று யாழ்ப்பாணம் , வன்னி, திருகோணமலை, அம்பாறை போன்ற பிரதேசங்களிலும் எமது தமிழரசு கட்சி அதிகளவான ஆசனங்களை பெற்றிருக்கின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திசைகாட்டி சின்னம் ஒரு ஆசனத்தையும் எமது கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றிருந்தது. ஆனாலும் தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெரும் வாரியான ஆசனங்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை. பட்டியலுக்கு ஊடாகவும், சில வட்டாரங்களுக்கூடாகவும் மாத்திரம் ஒரு சில ஆசனங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று தென்னிலங்கை கட்சியாக காணப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன போன்ற பல கட்சிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. எனவே பாராளுமன்றத்திலும் எமது மாவட்ட மக்கள் தமிழரசுக் கட்சியை வெற்றிபெற வைத்திருக்கின்றார்கள். அதுபோல் உள்ளுராட்சி மன்றத்திலும் எனது மக்கள் நமது கட்சியை வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள்.எமது கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனேகமாக வெற்றி பெற்றிருக்கின்றார். ஆனாலும் ஒரு சில இடத்தில் தோல்வி அடைந்திருக்கின்றார்கள். அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அது வேட்பாளரின் தெரிவின் போது மிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகின்றார்கள், மக்கள் வாக்குகளில் எவ்வளவு தூரம் அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது தொடர்பில் வேட்பாளர்களை கவனம் செலுத்தி தேர்வு செய்கின்ற போது நாம் சுமூகமான வெற்றிகளை பெறமுடியும். கற்றுக் கொண்ட பாடங்கள் படிப்பினைகளை வைத்து இனிவரும் தேர்தல்களில் நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். சில வட்டாரங்களில் எமது கட்சியினர் தோல்வியடைந்திருக்கின்றார்கள் அவ்வாறான வேட்பாளர்கள் எதிர்காலத்தில் மிகவும் உன்னிப்பாக அடையாளம் காணப்பட்டு சரியான வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.ஆளும் கட்சியாக இருக்கின்ற கட்சிகள் எப்போதும் தங்களுடைய அதிகார பலத்தினாலும், அதில் வரும் அபிவிருத்தி எனப்படுகின்ற மாயை ஊடாகவும், வருகின்ற மாகாண சபை தேர்தல் செல்வாக்கு செலுத்துவதற்கு அவர்கள் முற்படுகின்றார்கள். தமது கட்சி அதிகாரத்தை பெற்றால் கண்ணை மூடிக்கொண்டு அபிவிருத்திக்காக நிதிகளை அனுப்ப முடியும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.அவ்வாறான சில போதனைகள் காணப்படுகின்ற காரணத்தினால் உரிமை சார்ந்த அரசியலில் அக்கறையீனமாக காணப்படுகின்ற சிலர் ஒரு சில வட்டாரங்களில் தேசிய மக்கள் சக்தியை வெற்றி கொள்ள செய்திருக்கின்றார்கள். இது ஆளுங்கட்சியில் இருக்கின்றவர்களுக்கு இவ்வாறான ஒரு சில வட்டாரங்கள் சாதகமாக அமைந்திருக்கின்றன.விமர்சனங்களோடு மாத்திரம் நின்று விடாமல் எமது பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றி காணப்படுகின்ற இடங்களில் கல்விசார அபிவிருத்திகள் பௌதிகவளம் சார்ந்த செயற்பாடுகள், போன்றவற்றை முன்னெடுக்கப்படும் இடத்தில் பங்களிப்புகளை சரியானவர்களிடம் கொடுக்கின்ற போது அவர்கள் வீண்விரயம் இல்லாமல் அபிவிருத்தியை அந்தந்த பிரதேசங்களில் செய்ய முடியும் என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.குடிநீர் வழங்குதல் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான படிப்பகங்களை அமைத்தல் பாடசாலைகளுக்கு உதவி செய்தல், சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற பல உதவிகளை மேற்கொள்ளுகின்ற போது இவ்வாறான விடயங்களுக்கும் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற எமது உறவுகள் உதவிகளை மேற்கொள்கின்ற இடத்தில் எமது சமூகத்தை மேலும் துரிதமாக வளர்த்துக் கொள்வதற்கு உரிய பங்களிப்பாக இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.எமது இலங்கை தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளிலிருந்து வித்தியாசமாக செயற்படுவதில் பல பண்புகள் காணப்படுகின்றன. அந்த விதத்தில் ஊழல் மோசடி இலஞ்சம், வீண்விரயம், இல்லாமல் பிரதேச சபைகளை வழி நடத்தக்கூடியவர்களாக இருப்பவர்களை நாம் தவிசாளர், உப தவிசாளர், பதவிகளுக்கு தெரிவு செய்வதற்காக சிந்தித்து இருக்கின்றோம். இதைவிட ஏனைய சபைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் செயற்படக்கூடியவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவ்வாறானவர்கள் சுயநலம் குறைந்தவர்களாகவும் பொதுநலத்தில் அதிக அக்கறை காட்டக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதேபோன்று ஏனைய சக உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொண்டு பக்குவம் உடையவர்களாகவும் செயற்பட கூடியவர்களாக இருக்க வேண்டும். உள்நாட்டு நிதியையும் புலம்பெயர் மக்களின் நிதியையும் பெற்றுக்கொண்டு அபிவிருத்தியை அந்த மக்களுக்காக செய்யக்கூடிய ஒரு ஆளுமையுள்ளவர்களாகவும் அமைபவர்களாகவாறான பதவிகளுக்கு வைக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.குறிப்பாக தவிசாளர்களாக வருகின்றவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற பதவிக்காலத்தின் போது அர்ப்பணிப்புடன் பணியாற்றி தங்களுடைய பிரதேச சபையை ஒரு முன்மாதிரியான பிரதேசபையாக மாற்றக் கூடியவர்களாகவும் தங்களுக்கு கிடைத்திருக்கின்ற அதிகாரம் நிதி பலம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அபிவிருத்திகளை செய்து ஒரு மாறாத இடத்தை பிடிக்கக் கூடிய அளவிற்கு தலைவர் காணப்பட வேண்டும். அவர்கள் ஏனைய காட்சிகளைப் போன்று அல்லாமல் ஆளுமை உள்ள தலைவர்களாக செயல்பட வேண்டும்.எனினும்; எம்மால் ஒரு சில உள்ளுராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை காணப்படுகிறன. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இந்நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கட்சியாக இருக்கின்றதனால் அதிகளவான வரையில் தமிழ் தேசியக் கொள்கை சார்ந்து செயற்பட கூடியவர்களுடன் நாம் உடன்பாடுகளுடன் செயல்படுவது நல்லது. அதேவேளை சில கட்சிகளுக்கும் சில பிரதேச சபைகளில் எங்களுடைய உதவிகளும் தேவைப்படுகின்றன. அதேபோன்று எங்களுடைய கட்சியின் உதவிகளும், ஒருசில் கட்சிகளுக்கு ஏனை உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தேவைப்படுகின்றன. இந்நிலையில் பரஸ்பரம் நாங்கள் கலந்தாலோசித்து செயற்பட வேண்டி உள்ளது. சில சபைகளில் முஸ்லிம் மக்கள் தெளிவாக வாழ்கின்ற பிரதேசங்களில் எங்களுடைய தமிழரசு கட்சியின் ஆதரவு அவர்களுக்கு தேவையாக இருக்கின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பிரதேச சபைகளில் முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையாக இருக்கின்றது. எனவே இவ்விடத்தில் பரஸ்பரமும் இரு பக்கங்களும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.விடையத்தில் மிகவும் பேரினவாத கட்சியாக காணப்படுகின்ற அல்லது அவர்களுக்கு அடிவருடிகளாக காணப்படுகின்றவர் களுடன் நாங்கள் சேர்ந்து கொள்வதில் நாங்கள் அக்கறை காட்டவில்லை. எனவே நாங்கள் தமிழ் தேசியத்துடன் பயணிக்கின்ற கட்சிகளுடன் இணைந்து அவர்கள் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் சிந்திக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement