• Jun 05 2025

சீனிக்கு விதிக்கப்படும் வட் வரி - அரசிடம் சஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Chithra / Jun 3rd 2025, 2:27 pm
image

 

உள்ளூர் சீனி உற்பத்திக்கு 18 சதவீத வட் வரியும், இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50 சதவீத வட் வரியும் விதிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர் உள்ளூர் சர்க்கரைக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சுனில் ஹந்துன்நெத்தி, ஒரு பொருளுக்கு மட்டும் வட் வரியை நீக்க முடியாது என்று பதில் வழங்கியுள்ளார்.

இலங்கை வரிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை பல்வேறு வகையான கரிம சீனியாக ஏற்றுமதி செய்வது குறித்து சீனா, ஈரான் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

உலக சந்தையில் கரிம சீனிக்கு அதிக தேவை இருப்பதாகவும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியில் கரிம சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனித் தொழிற்சாலைகளின் வருவாயை உயர்த்துவதற்கான ஒரு வழி சிவப்பு சீனியை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை என்று கூறினார்.

சீனிக்கு விதிக்கப்படும் வட் வரி - அரசிடம் சஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை  உள்ளூர் சீனி உற்பத்திக்கு 18 சதவீத வட் வரியும், இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50 சதவீத வட் வரியும் விதிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர் உள்ளூர் சர்க்கரைக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில், சுனில் ஹந்துன்நெத்தி, ஒரு பொருளுக்கு மட்டும் வட் வரியை நீக்க முடியாது என்று பதில் வழங்கியுள்ளார்.இலங்கை வரிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.மேலும்  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை பல்வேறு வகையான கரிம சீனியாக ஏற்றுமதி செய்வது குறித்து சீனா, ஈரான் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.உலக சந்தையில் கரிம சீனிக்கு அதிக தேவை இருப்பதாகவும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியில் கரிம சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.சீனித் தொழிற்சாலைகளின் வருவாயை உயர்த்துவதற்கான ஒரு வழி சிவப்பு சீனியை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement