அகமதாபாத் அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்வர்களில் மணிப்பூரைச் சேர்ந்த இரு விமானப் பணிப்பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த விமானப் பணிப்பெண்களில் ஒருவுர் மணிப்பூரைச் சேர்ந்த லாம்னுந்தெம் சிங்சன் என்ற 26 வயது பெண் ஆவார். மணிப்பூர் வன்முறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இவர் ஒருவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் இத் துயர விபத்து ஏற்பட்டுள்ளது.
லாம்னுந்தெம் சிங்சன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள். தந்தை இறந்த நிலையில் விதவை தாய் உடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த சகோதரர் நீண்ட நாள் நோய் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இரண்டு சகோதரர்கள் படித்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்து தான் வாழ்ந்து வந்துள்ளனர்.
இறுதி நாளன்று தனது தாயாரிடம் லண்டனுக்கு செல்ல இருக்கிறேன். அதனால் முன்னதாக தூங்கச் செல்கிறேன் என பேசியுள்ளார். அதன்பின் தான் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
அவரது சகோதரர் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் குஜராத் அகமதாபாத் விரைந்துள்ளார். அவரின் மற்றொரு சகோதரர் மற்றும் உறவினர் நாகலாந்து திமாபூர் சென்று அங்கிருந்து அகமதாபாத் செல்ல இருக்கிறார். இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போனோம். விபத்து பற்றிய செய்திகள் வெளியானதிலிருந்து அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார். சாப்பிட மறுத்துவிட்டார் என உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானப் பணிப்பெண்ணின் தாயாருக்கு அழைப்பை ஏற்படுத்திய ஏர் இந்தியா அதிகாரிகள், அவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது குடும்பம் நிலைகுலைந்துள்ளது.
இதேவேளை- மணிப்பூரைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் கோங்பிரைலத்பம் நந்தோய் சர்மா என்பவரும் குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அவரது குடும்பத்தினரின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இவர் தனது 19 வயதில் பணிக்கு சேர்ந்த நந்தோய் சர்மா கோங்பிரைலட்பமின் 21 வயதில் குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். பணிக்கு சேர்ந்து இரண்டு வருடங்களே ஆன நந்தோய் சர்மா விமான விபத்தில் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது.
"லண்டனுக்குச் செல்கிறேன் முன்னதாக தூங்கச் செல்கிறேன்" -விமானப் பணிப்பெண் தாயிடம் பேசிய இறுதி வார்த்தைகள் அகமதாபாத் அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்வர்களில் மணிப்பூரைச் சேர்ந்த இரு விமானப் பணிப்பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த விமானப் பணிப்பெண்களில் ஒருவுர் மணிப்பூரைச் சேர்ந்த லாம்னுந்தெம் சிங்சன் என்ற 26 வயது பெண் ஆவார். மணிப்பூர் வன்முறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இவர் ஒருவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் இத் துயர விபத்து ஏற்பட்டுள்ளது.லாம்னுந்தெம் சிங்சன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள். தந்தை இறந்த நிலையில் விதவை தாய் உடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த சகோதரர் நீண்ட நாள் நோய் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இரண்டு சகோதரர்கள் படித்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்து தான் வாழ்ந்து வந்துள்ளனர். இறுதி நாளன்று தனது தாயாரிடம் லண்டனுக்கு செல்ல இருக்கிறேன். அதனால் முன்னதாக தூங்கச் செல்கிறேன் என பேசியுள்ளார். அதன்பின் தான் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.அவரது சகோதரர் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் குஜராத் அகமதாபாத் விரைந்துள்ளார். அவரின் மற்றொரு சகோதரர் மற்றும் உறவினர் நாகலாந்து திமாபூர் சென்று அங்கிருந்து அகமதாபாத் செல்ல இருக்கிறார். இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போனோம். விபத்து பற்றிய செய்திகள் வெளியானதிலிருந்து அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார். சாப்பிட மறுத்துவிட்டார் என உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். விமானப் பணிப்பெண்ணின் தாயாருக்கு அழைப்பை ஏற்படுத்திய ஏர் இந்தியா அதிகாரிகள், அவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது குடும்பம் நிலைகுலைந்துள்ளது. இதேவேளை- மணிப்பூரைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் கோங்பிரைலத்பம் நந்தோய் சர்மா என்பவரும் குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அவரது குடும்பத்தினரின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.இவர் தனது 19 வயதில் பணிக்கு சேர்ந்த நந்தோய் சர்மா கோங்பிரைலட்பமின் 21 வயதில் குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். பணிக்கு சேர்ந்து இரண்டு வருடங்களே ஆன நந்தோய் சர்மா விமான விபத்தில் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது.