• Jun 06 2025

அதிகாரிகளின் ஆதரவுடன் வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடி - தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் குற்றச்சாட்டு..!

shanuja / Jun 5th 2025, 2:42 pm
image

யாழ்ப்பாணம் -  வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகாரிகளின் ஆதரவுடன் சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்று வருகின்றது என்று யாழ். மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  


வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்துக்கான ஊடக மையத்தில் இன்று (5) ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


வடமராட்சி கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத தொழில்களால் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்கள் பிடிபட்டு அளிக்கப்படுகின்றன. இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு  சமாசம் உட்பட கடல்தொழில் அமைச்சருக்கும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் கைது செய்யப்படுவர்களை முல்லைத்தீவு அதிகாரிகள்   விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். படகுகளை தடுத்து வைக்கிறார்கள் . ஆனால் வடமராட்சி கிழக்கு பகுதியில் உடன் விடுவிக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால் எமது கடற்பகுதியில் நாளாந்தம் சட்டவிரோத மீன்பிடி முறை அதிகரித்து வருகிறது


முல்லைத்தீவில் இருக்கின்ற சமாச தலைவர்,நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நேர்மையானவர்கள். ஆனால் எமது வடமராட்சி  கிழக்கு சமாசம் மற்றும் நீரியல்வளத் திணைகள அதிகாரிகள்  தான் இங்கு சட்ட விரோத தொழில் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கிறார்கள் .இவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.


இலங்கையின்  அம்பாந்தோட்டையிலிருந்து  மீனவர்கள் வடமராட்சி கிழக்கிற்கு  வருகை தந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.இவர்கள் வடமராட்சி கிழக்கு சமாசம் மற்றும் சங்கங்களின் ஆதரவுடன் இங்கே வருகிறார்கள்.எமது கடல் பகுதியை விரைவில் அழித்தொழிக்க பெரும் சதி நடைபெறுகின்றது. இதற்கு  அதிகாரிகளும் காரணமாக இருக்கிறார்கள். 


யாழ். நீரியல்வளத் திணைக்கள அதிகாரியை பற்றி நன்கு தெரியும் .அவர் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்ய மாட்டார். ஏன் என்றால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுருக்குவலை மீனை நீதிமன்றம் கொண்டு செல்வதாக கூறி மன்னாருக்கு கொண்டு சென்றவர்  என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. 


எனவே கடற்றொழில்  அமைச்சர்  இது தொடர்பில் கவனம் எடுத்து வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இடம்பெறும்  சட்டவிரோத தொழிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார். 

அதிகாரிகளின் ஆதரவுடன் வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடி - தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் குற்றச்சாட்டு. யாழ்ப்பாணம் -  வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகாரிகளின் ஆதரவுடன் சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்று வருகின்றது என்று யாழ். மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்துக்கான ஊடக மையத்தில் இன்று (5) ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வடமராட்சி கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத தொழில்களால் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்கள் பிடிபட்டு அளிக்கப்படுகின்றன. இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு  சமாசம் உட்பட கடல்தொழில் அமைச்சருக்கும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் கைது செய்யப்படுவர்களை முல்லைத்தீவு அதிகாரிகள்   விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். படகுகளை தடுத்து வைக்கிறார்கள் . ஆனால் வடமராட்சி கிழக்கு பகுதியில் உடன் விடுவிக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால் எமது கடற்பகுதியில் நாளாந்தம் சட்டவிரோத மீன்பிடி முறை அதிகரித்து வருகிறதுமுல்லைத்தீவில் இருக்கின்ற சமாச தலைவர்,நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நேர்மையானவர்கள். ஆனால் எமது வடமராட்சி  கிழக்கு சமாசம் மற்றும் நீரியல்வளத் திணைகள அதிகாரிகள்  தான் இங்கு சட்ட விரோத தொழில் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கிறார்கள் .இவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.இலங்கையின்  அம்பாந்தோட்டையிலிருந்து  மீனவர்கள் வடமராட்சி கிழக்கிற்கு  வருகை தந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.இவர்கள் வடமராட்சி கிழக்கு சமாசம் மற்றும் சங்கங்களின் ஆதரவுடன் இங்கே வருகிறார்கள்.எமது கடல் பகுதியை விரைவில் அழித்தொழிக்க பெரும் சதி நடைபெறுகின்றது. இதற்கு  அதிகாரிகளும் காரணமாக இருக்கிறார்கள். யாழ். நீரியல்வளத் திணைக்கள அதிகாரியை பற்றி நன்கு தெரியும் .அவர் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்ய மாட்டார். ஏன் என்றால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுருக்குவலை மீனை நீதிமன்றம் கொண்டு செல்வதாக கூறி மன்னாருக்கு கொண்டு சென்றவர்  என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே கடற்றொழில்  அமைச்சர்  இது தொடர்பில் கவனம் எடுத்து வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இடம்பெறும்  சட்டவிரோத தொழிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார். 

Advertisement

Advertisement

Advertisement