வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் மேல் மாகாணம், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல்வேறு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.மேலும் மேல் மாகாணம், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல்வேறு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.