பஞ்சாப்பில் திருமண விழாவின் போது மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மழை போல் பொழியும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வைரலாகிய காணொளியில், மணமகளை நடுவே நிற்க வைத்து மணமகனும் குடும்பத்தினரும் பணத்தினை காற்றில் வீசுவதை காண முடிகிறது.
மணமகன் தனது கையில் இருந்த பையில் இருந்து பணத்தை எடுத்து வீசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
முதலில் 8.5 கோடி ரூபாய் செலவிட்டதாக தகவல் பரவிய நிலையில், நிகழ்ச்சியில் டிஜே-வாக கலந்து கொண்ட நிசான் சிங் “மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தியதாகவும், பின்னர் அவற்றை மீண்டும் சேகரித்து வைத்ததாகவும் வீண் செய்யவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவியுள்ள இந்த நிகழ்வு, திருமணங்களில் ஆடம்பரச் செலவுகள் குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது.
பூவுக்கு பதிலாக மணமகளை பணமழை தூவி வரவேற்ற மணமகன் https://www.facebook.com/share/v/1E7MWY1Rn7/பஞ்சாப்பில் திருமண விழாவின் போது மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மழை போல் பொழியும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வைரலாகிய காணொளியில், மணமகளை நடுவே நிற்க வைத்து மணமகனும் குடும்பத்தினரும் பணத்தினை காற்றில் வீசுவதை காண முடிகிறது. மணமகன் தனது கையில் இருந்த பையில் இருந்து பணத்தை எடுத்து வீசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.முதலில் 8.5 கோடி ரூபாய் செலவிட்டதாக தகவல் பரவிய நிலையில், நிகழ்ச்சியில் டிஜே-வாக கலந்து கொண்ட நிசான் சிங் “மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தியதாகவும், பின்னர் அவற்றை மீண்டும் சேகரித்து வைத்ததாகவும் வீண் செய்யவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவியுள்ள இந்த நிகழ்வு, திருமணங்களில் ஆடம்பரச் செலவுகள் குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது.