• Oct 11 2025

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் மலர் வெளியீடு..!

Aathira / Oct 11th 2025, 10:26 am
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு பகுதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான 'ஞானச்சுடர்' 333வது இதழ் நேற்று சன்னிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வு பஞ்ச புராண ஓதுதலுடன் தொடங்க, ஊடகவியலாளர் சி.த.காண்டீபன் வெளியீட்டு உரையை வழங்கினார். 

யாழ்ப்பாணம் கல்லூரி ஆசிரியர் துரை கணேசமூர்த்தி மதிப்பீட்டுரை வழங்கினார்.

இதற்குப் பிறகு சிறப்பு பிரதிகளும் வழங்கப்பட்டன. உதவித் திட்டத்தின் கீழ் மதிப்புச் செலவு ரூ.146,550 மதிப்புடைய 3 துவிச்சக்கரவண்டிகள் கெருடா தெற்கு, தொண்டைமானாறு, வரியப்புலம், சுன்னாகம் மற்றும் மூளாய் வீதி பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் ஞானச்சுடர் வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். 


சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் மலர் வெளியீடு. யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு பகுதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான 'ஞானச்சுடர்' 333வது இதழ் நேற்று சன்னிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்வு பஞ்ச புராண ஓதுதலுடன் தொடங்க, ஊடகவியலாளர் சி.த.காண்டீபன் வெளியீட்டு உரையை வழங்கினார். யாழ்ப்பாணம் கல்லூரி ஆசிரியர் துரை கணேசமூர்த்தி மதிப்பீட்டுரை வழங்கினார்.இதற்குப் பிறகு சிறப்பு பிரதிகளும் வழங்கப்பட்டன. உதவித் திட்டத்தின் கீழ் மதிப்புச் செலவு ரூ.146,550 மதிப்புடைய 3 துவிச்சக்கரவண்டிகள் கெருடா தெற்கு, தொண்டைமானாறு, வரியப்புலம், சுன்னாகம் மற்றும் மூளாய் வீதி பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் ஞானச்சுடர் வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement