• Apr 27 2026

இன்று முதல் கறுப்புப்பட்டி அணிந்து கடமைக்கு வரும் சுங்க அதிகாரிகள்

Chithra / Feb 24th 2026, 11:01 am
image

 


6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. 

தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, இன்று (24) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் கறுப்புப்பட்டி அணிந்து கடமைகளில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 

எவ்வாறாயினும், இப்பிரச்சினை தொடர்பில் வரும் 26ஆம் திகதி நிதி அமைச்சு, பொது சேவை ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளுக்கு அமைய, வரும் வெள்ளிக்கிழமை சுங்க தொழிற்சங்கக் கூட்டணியின் பிரதிநிதிகள் கூடி, தமது தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தகட்டத் தீர்மானங்களை எடுக்கவுள்ளனர்.

இன்று முதல் கறுப்புப்பட்டி அணிந்து கடமைக்கு வரும் சுங்க அதிகாரிகள்  6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (24) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் கறுப்புப்பட்டி அணிந்து கடமைகளில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். எவ்வாறாயினும், இப்பிரச்சினை தொடர்பில் வரும் 26ஆம் திகதி நிதி அமைச்சு, பொது சேவை ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளுக்கு அமைய, வரும் வெள்ளிக்கிழமை சுங்க தொழிற்சங்கக் கூட்டணியின் பிரதிநிதிகள் கூடி, தமது தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தகட்டத் தீர்மானங்களை எடுக்கவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement