தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உட்பட நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் ஜூன் 26 வரை நீடிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் வசிக்கும் ஒரு பெண்ணின் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கியின் உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மே 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கியை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உட்பட நான்கு சந்தேக நபர்களும் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில். தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உட்பட நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் ஜூன் 26 வரை நீடிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் வசிக்கும் ஒரு பெண்ணின் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கியின் உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மே 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.துப்பாக்கியை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உட்பட நான்கு சந்தேக நபர்களும் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.