திருகோணமலை - திருக்கடலூர் பகுதி மீனவர்களால் இன்று வீதிமறியல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை - திருக்கடலூர் மீனவ சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு வாழைச்சேனை பகுதியில் வைத்து சேதம் அடையச் செய்து, மீனவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வழியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மீனவர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?, நாங்களும் இந்த நாட்டுப் பிரஜைகளே, மீனவனின் குரல் அரசுக்கு கேட்காதா?, மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியமாறு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மீனவர்களின் வீதிமறியல் போராட்டம் காரணமாக சில மணி நேரம் வீதிப் போக்குவரத்தும் தடைபட்டிருந்தது.
அத்தோடு போராட்ட இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு குறித்த இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன வருகை தந்து மீனவர்களோடு கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
திருகோணமலை திருக்கடலூரில் மீனவர்கள் வீதிமறியல் போராட்டம் திருகோணமலை - திருக்கடலூர் பகுதி மீனவர்களால் இன்று வீதிமறியல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.திருகோணமலை - திருக்கடலூர் மீனவ சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு வாழைச்சேனை பகுதியில் வைத்து சேதம் அடையச் செய்து, மீனவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வழியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மீனவர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா, நாங்களும் இந்த நாட்டுப் பிரஜைகளே, மீனவனின் குரல் அரசுக்கு கேட்காதா, மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியமாறு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.மீனவர்களின் வீதிமறியல் போராட்டம் காரணமாக சில மணி நேரம் வீதிப் போக்குவரத்தும் தடைபட்டிருந்தது.அத்தோடு போராட்ட இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தது.அத்தோடு குறித்த இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன வருகை தந்து மீனவர்களோடு கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.