• Jun 06 2025

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா வழிபாடுகள் ஆரம்பம்..!

shanuja / Jun 5th 2025, 1:27 pm
image

வவுனியா - இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நவநாள் வழிபாடுகள்  நேற்று (04.06.2025)  மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடனும், கொடியேற்றத்துடனும் ஆரம்பமாகியது.  


கொடியினை பங்குத்தந்தை அருட்தந்தை அ.டலிமா அடிகளாரினால் ஆசிர்வதித்து  ஏற்றி வைக்கப்பட்டதோடு திருப்பலி ஆரம்பமாகியது. 


அருட்தந்தை பிலிப் றஞ்சனகுமார் அடிகளாரினால் ஆரம்பிக்கப்பட்ட திருப்பலி சிறுவர்கள், பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு சிறந்த மறையுறை நிகழ்த்தப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. 


திருப்பலியில் பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிதா டலிமா அடிகளார், மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்தந்தை யேசுராஜா அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை விமல்ரோய் அடிகளார், 

மதவுவைத்தக்குளம் செபமாலைதாசஸ் சபையின் முதல்வர் அருட்தந்தை நிர்மலராஜ் அடிகளார் உள்ளிட்ட பல அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர். 


புனித அந்தோனியார் திருநாள் பெருவிழா திருப்பலி எதிர்வரும் 13ஆம் திகதி மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா வழிபாடுகள் ஆரம்பம். வவுனியா - இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நவநாள் வழிபாடுகள்  நேற்று (04.06.2025)  மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடனும், கொடியேற்றத்துடனும் ஆரம்பமாகியது.  கொடியினை பங்குத்தந்தை அருட்தந்தை அ.டலிமா அடிகளாரினால் ஆசிர்வதித்து  ஏற்றி வைக்கப்பட்டதோடு திருப்பலி ஆரம்பமாகியது. அருட்தந்தை பிலிப் றஞ்சனகுமார் அடிகளாரினால் ஆரம்பிக்கப்பட்ட திருப்பலி சிறுவர்கள், பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு சிறந்த மறையுறை நிகழ்த்தப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிதா டலிமா அடிகளார், மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்தந்தை யேசுராஜா அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை விமல்ரோய் அடிகளார், மதவுவைத்தக்குளம் செபமாலைதாசஸ் சபையின் முதல்வர் அருட்தந்தை நிர்மலராஜ் அடிகளார் உள்ளிட்ட பல அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர். புனித அந்தோனியார் திருநாள் பெருவிழா திருப்பலி எதிர்வரும் 13ஆம் திகதி மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement