180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் வைத்தியசாலைகளில் நாற்பது வகையான மருந்துகளுக்கு மாத்திரமே பற்றாக்குறை இருப்பதாக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
பொருளாதாரப் பிரச்சினைகள் வந்த பிறகு, மருந்துகளின் பற்றாக்குறை இன்னும் அதிகரித்தது.
நெரிசல் இன்னும் இருக்கிறது. இதன் காரணமாக, எங்கள் விநியோக வலையமைப்பில் அவ்வப்போது பலவீனங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக சுமார் 150 முதல் 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்கும்.
இந்தப் பற்றாக்குறை முழு நாட்டிலும் ஏற்படவில்லை, ஆனால் நமது பிரதான களஞ்சியசாலையில் ஏற்படுகிறது.
வைத்தியசாலை மட்டத்தில், சுமார் நாற்பது மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது. நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி, பிரதான மருந்துக் களுஞ்சியசாலையில் பாதுகாப்பான இருப்பைப் பராமரிப்பதாகும்.
அமைச்சர்களாகிய நாங்கள், அவசர கொள்முதலாக மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு இடைப்பட்ட பாதுகாப்பு இருப்பை வழங்க அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளோம் என்றார்.
மருந்துப் பற்றாக்குறை குறித்து பிரதி அமைச்சர் விளக்கம் 180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் வைத்தியசாலைகளில் நாற்பது வகையான மருந்துகளுக்கு மாத்திரமே பற்றாக்குறை இருப்பதாக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், பொருளாதாரப் பிரச்சினைகள் வந்த பிறகு, மருந்துகளின் பற்றாக்குறை இன்னும் அதிகரித்தது. நெரிசல் இன்னும் இருக்கிறது. இதன் காரணமாக, எங்கள் விநியோக வலையமைப்பில் அவ்வப்போது பலவீனங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக சுமார் 150 முதல் 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்கும். இந்தப் பற்றாக்குறை முழு நாட்டிலும் ஏற்படவில்லை, ஆனால் நமது பிரதான களஞ்சியசாலையில் ஏற்படுகிறது. வைத்தியசாலை மட்டத்தில், சுமார் நாற்பது மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது. நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை.இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி, பிரதான மருந்துக் களுஞ்சியசாலையில் பாதுகாப்பான இருப்பைப் பராமரிப்பதாகும். அமைச்சர்களாகிய நாங்கள், அவசர கொள்முதலாக மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு இடைப்பட்ட பாதுகாப்பு இருப்பை வழங்க அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளோம் என்றார்.