உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த பெண் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
கனடாவில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த குமுதினி கோபாலகிருஷ்ணனே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய நடுவர் குழாம் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்றிரவு(01) நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குமுதினி கோபாலகிருஷ்ணன் இடம் பிடித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் ரிம் அண்ட் சென்னை டஃபி (Tim and Cindy Duffy) நிகழ்த்திய 527 மெழுகுவர்த்தி தாங்கிகள் சேகரிப்பு என்ற சாதனையையும் இதன் மூலம் குமுதினி கோபாலகிருஷ்ணன் முறியடித்துள்ளார்.
குமுதினி கோபாலகிருஷ்ணன் கேண்டில்ஸ் பியூட்டி(Candle Beauty) நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் திகழ்கிறார்.
தனது 30 வருட கால முயற்சியின் பயனாக தாய்நாட்டில் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தமை பெருமைக்குரிய விடயம் என குமுதினி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கின்னஸ்ஸில் இடம்பிடித்த ஈழத்துப் பெண் குமுதினி - 30 வருட முயற்சியால் அமெரிக்கரின் சாதனையை முறியடிப்பு உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த பெண் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார். கனடாவில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த குமுதினி கோபாலகிருஷ்ணனே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார்.இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய நடுவர் குழாம் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்றிரவு(01) நிகழ்த்தப்பட்டுள்ளது.இதன் மூலம் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குமுதினி கோபாலகிருஷ்ணன் இடம் பிடித்துள்ளார்.மேலும், அமெரிக்காவின் ரிம் அண்ட் சென்னை டஃபி (Tim and Cindy Duffy) நிகழ்த்திய 527 மெழுகுவர்த்தி தாங்கிகள் சேகரிப்பு என்ற சாதனையையும் இதன் மூலம் குமுதினி கோபாலகிருஷ்ணன் முறியடித்துள்ளார்.குமுதினி கோபாலகிருஷ்ணன் கேண்டில்ஸ் பியூட்டி(Candle Beauty) நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் திகழ்கிறார்.தனது 30 வருட கால முயற்சியின் பயனாக தாய்நாட்டில் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தமை பெருமைக்குரிய விடயம் என குமுதினி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.