• Jun 03 2025

அல்வாய் படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு!

Thansita / Jun 1st 2025, 3:32 pm
image

யாழ். வடமராட்சி பகுதியில் உள்ள அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது செல்வீச்சு நடத்தி படுகொலை செய்யப்பட்டதன் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (01) மாலைசந்தை மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

 'ஒப்பிரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த வடமராட்சி மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். 

அத்துடன் வடமராட்சி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பரவலாக நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

மைக்கல் விளையாட்டு கழகம், மைக்கல் நேசக்கரம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நினைவேந்தல் நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஈகைச்சுடரினை ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். 

தன்போது மைக்கல் நேசக்கரம் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கர வண்டி, உலருணவுப் பொருட்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அல்வாய் படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு யாழ். வடமராட்சி பகுதியில் உள்ள அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது செல்வீச்சு நடத்தி படுகொலை செய்யப்பட்டதன் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (01) மாலைசந்தை மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. 'ஒப்பிரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த வடமராட்சி மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். அத்துடன் வடமராட்சி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பரவலாக நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.மைக்கல் விளையாட்டு கழகம், மைக்கல் நேசக்கரம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நினைவேந்தல் நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஈகைச்சுடரினை ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். தன்போது மைக்கல் நேசக்கரம் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கர வண்டி, உலருணவுப் பொருட்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement