தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நேற்று இரவு முதல் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக குறித்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விடுதியில் தங்கி கல்விகற்று வரும் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து மாணவர்களும் நேற்று(15) இரவு விடுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.சிரேஸ்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருகின்றது என்றும் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக விடுதியில் முதலாம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. மோதலில் மாணவர்கள் ஐவர், பல்கலைக்கழக சாரதி என ஆறு பேர் காயமடைந்து தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலையில் மோதல் - விடுதியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நேற்று இரவு முதல் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக குறித்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விடுதியில் தங்கி கல்விகற்று வரும் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதற்கமைய அனைத்து மாணவர்களும் நேற்று(15) இரவு விடுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.சிரேஸ்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருகின்றது என்றும் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விடுதியில் முதலாம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. மோதலில் மாணவர்கள் ஐவர், பல்கலைக்கழக சாரதி என ஆறு பேர் காயமடைந்து தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.