• May 24 2025

வானிலையில் மாற்றம்- கொட்டித் தீர்க்கப்போகும் மழை

Thansita / May 24th 2025, 8:54 am
image

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற இடங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். 

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.  நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்இ காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை இருக்கும்.

 சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரையிலும் அதிகரிக்கலாம்.

சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர்  வரையிலும் அதிகரிக்கலாம்.

சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

சிலாபம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரக் கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன்  கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

வானிலையில் மாற்றம்- கொட்டித் தீர்க்கப்போகும் மழை மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற இடங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.  நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேலும் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்இ காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை இருக்கும். சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரையிலும் அதிகரிக்கலாம்.சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர்  வரையிலும் அதிகரிக்கலாம்.சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.சிலாபம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரக் கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன்  கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

Advertisement

Advertisement

Advertisement