இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமான விபத்து நடக்கும் என ஒரு வாரத்திற்கு முன்னர் பெண் ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளதாக தற்போது சமூகவலைத்தளங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்றையதினம் பிற்பகல் 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் தனது ஜோதிட கணிப்பால் துல்லியமாக கணித்துள்ளார் இந்தியாவின் பிரபல ஜோதிடர் ஷர்மிஸ்தா.
இவர் கடந்த ஆண்டின் இறுதியில் 2025 ஆம் ஆண்டில் 'விமான விபத்து தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும்' என்று கடந்த ஆண்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அதுமட்டுமன்றி, கடந்த வாரம் அவர் தனது கணிப்பை மீண்டும் உறுதி செய்திருந்தார். 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து மற்றும் விமானப் போக்குவரத்து அழிவு ஏற்படும் என்ற கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கூறுகிறேன் என அதில் அவர் பதிவு செய்திருந்தார்.
இவரது கணிப்பின் படி,
2025 இல் விமானத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும், அதே வேளையில் பெரிய விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கணித்திருந்தார். அதுவும் இவையெல்லாம் குரு பகவான் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லும் போது நடக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் கணித்த விடயங்கள் தற்போது நிகழ்ந்துள்ளமை தொடர்பில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவரது சமூக வலைத்தள பதிவுகளும் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா விமான விபத்தை முன்னரே கணித்த ஜோதிடர்; வைரலாகும் பதிவு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமான விபத்து நடக்கும் என ஒரு வாரத்திற்கு முன்னர் பெண் ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளதாக தற்போது சமூகவலைத்தளங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்றையதினம் பிற்பகல் 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் தனது ஜோதிட கணிப்பால் துல்லியமாக கணித்துள்ளார் இந்தியாவின் பிரபல ஜோதிடர் ஷர்மிஸ்தா.இவர் கடந்த ஆண்டின் இறுதியில் 2025 ஆம் ஆண்டில் 'விமான விபத்து தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும்' என்று கடந்த ஆண்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.அதுமட்டுமன்றி, கடந்த வாரம் அவர் தனது கணிப்பை மீண்டும் உறுதி செய்திருந்தார். 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து மற்றும் விமானப் போக்குவரத்து அழிவு ஏற்படும் என்ற கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கூறுகிறேன் என அதில் அவர் பதிவு செய்திருந்தார்.இவரது கணிப்பின் படி,2025 இல் விமானத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும், அதே வேளையில் பெரிய விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கணித்திருந்தார். அதுவும் இவையெல்லாம் குரு பகவான் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லும் போது நடக்கும் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில் அவர் கணித்த விடயங்கள் தற்போது நிகழ்ந்துள்ளமை தொடர்பில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவரது சமூக வலைத்தள பதிவுகளும் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.