திருகோணமலை மாவட்ட விசேட ( காணி) மத்தியஸ்த சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (28) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது மாவட்ட செயலகத்தின் மத்தியஸ்த பயிற்றுனர் அதிகாரி வீ.சவரிநாயகம், மத்தியஸ்த உத்தியோகத்தர் பு.பவானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இதன்போது புதிய தவிசாளராக திருமதி. ஏ.எம்.தாஹிரா, உபதவிசாளராக டபிள்யூ.ஏ.என்.பிரியங்கிகா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ஏனையோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.
மத்தியஸ்த சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட விசேட ( காணி) மத்தியஸ்த சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (28) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வானது மாவட்ட செயலகத்தின் மத்தியஸ்த பயிற்றுனர் அதிகாரி வீ.சவரிநாயகம், மத்தியஸ்த உத்தியோகத்தர் பு.பவானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.இதன்போது புதிய தவிசாளராக திருமதி. ஏ.எம்.தாஹிரா, உபதவிசாளராக டபிள்யூ.ஏ.என்.பிரியங்கிகா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ஏனையோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.