லண்டனிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா போயிங் விமானமொன்று தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணிகள், விமான அதிகாரிகள் ஆகியோருக்கு தலைச்சுற்று, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டதுடன் விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழு பயணிகளுக்குத் தேவையான சிகிச்சையை வழங்கினர்.
இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், விமானத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்து விசாரணை இடம்பெறுகின்றது- எனத் தெரிவித்துள்ளது.
குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12 ஆம் திகதி லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது.
விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தையடுத்து லண்டன் - மும்பை விமானசேவை ஆரம்பித்த நிலையில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் ஏதேனும் தவறு இருக்கலாம் அல்லது உலகை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாததால் விமானத்தில் பயணிப்பதற்கு பயணிகள் உடல், உள ரீதியில் சிரமத்தை எதிர்கொண்டிருக்கலாம் என்ற போர்வையில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயணிகளின் உடல்நலக்குறைவால் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் லண்டனிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா போயிங் விமானமொன்று தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகள், விமான அதிகாரிகள் ஆகியோருக்கு தலைச்சுற்று, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டதுடன் விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழு பயணிகளுக்குத் தேவையான சிகிச்சையை வழங்கினர்.இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், விமானத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்து விசாரணை இடம்பெறுகின்றது- எனத் தெரிவித்துள்ளது. குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12 ஆம் திகதி லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தையடுத்து லண்டன் - மும்பை விமானசேவை ஆரம்பித்த நிலையில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் ஏதேனும் தவறு இருக்கலாம் அல்லது உலகை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாததால் விமானத்தில் பயணிப்பதற்கு பயணிகள் உடல், உள ரீதியில் சிரமத்தை எதிர்கொண்டிருக்கலாம் என்ற போர்வையில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.