• Aug 26 2025

கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி; பேருந்தின் சாரதி கைது

Chithra / Aug 26th 2025, 9:43 am
image


கொழும்பு,  மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சல்கஸ் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொட்டாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேவிந்த ருக்ஷன் என்ற 30 வயது இளைஞர் விபத்தில் படுகாயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்தேகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தச் சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி; பேருந்தின் சாரதி கைது கொழும்பு,  மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சல்கஸ் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேவிந்த ருக்ஷன் என்ற 30 வயது இளைஞர் விபத்தில் படுகாயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மத்தேகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement