• Apr 20 2026

ஒருமாதங்களை எட்டிய யுக்திய நடவடிக்கை...! மேலும் 943 பேர் கைது...!samugammedia

Ziya / Jan 18th 2024, 10:55 am
image

கடந்த ஒரு மாதமாக நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையான 'யுக்திய'  சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு   அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறானதொரு நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 943 சந்தேகநபர்கள் செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சோதனையில் 199 கிராம் ஹெரோயின், 168 கிராம் ஐஸ் மற்றும் 59 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப்பொருளுக்கு அடிமையான 25 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒருமாதங்களை எட்டிய யுக்திய நடவடிக்கை. மேலும் 943 பேர் கைது.samugammedia கடந்த ஒரு மாதமாக நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையான 'யுக்திய'  சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு   அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.இவ்வாறானதொரு நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 943 சந்தேகநபர்கள் செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த சோதனையில் 199 கிராம் ஹெரோயின், 168 கிராம் ஐஸ் மற்றும் 59 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.அத்துடன், போதைப்பொருளுக்கு அடிமையான 25 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement