• Apr 20 2026

யாழில் மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கிய சேலை...! பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...! samugammedia

Ziya / Feb 26th 2024, 8:50 am
image

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அராலி பாலத்திற்கு அண்மையில் உள்ள வீதியால்  சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த பெண்ணின் சேலையானது மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவமானது இன்று(26)  காலை அராலி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



யாழில் மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கிய சேலை. பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை. samugammedia வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அராலி பாலத்திற்கு அண்மையில் உள்ள வீதியால்  சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த பெண்ணின் சேலையானது மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவமானது இன்று(26)  காலை அராலி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement