வடமராட்சி அல்வாயில் நேற்று காணாமல் போன நபர் பருத்தித்துறை வியாபாரி மூலைப் பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
கடற்கரையில் சடலம் கரையொதுங்கிய நிலையில் கிராம வாசிகளால் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்றிலிருந்து காணாமல் போன குறித்த நபரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அல்வாயில் நேற்று காணாமல் போன நபர்; பருத்தித்துறை கடற்கரையில் இன்று சடலமாக மீட்பு வடமராட்சி அல்வாயில் நேற்று காணாமல் போன நபர் பருத்தித்துறை வியாபாரி மூலைப் பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.கடற்கரையில் சடலம் கரையொதுங்கிய நிலையில் கிராம வாசிகளால் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்றிலிருந்து காணாமல் போன குறித்த நபரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.