ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்கு வரும் முதல் அகலமான விமானமான புதிய ஏர்பஸ் A330-200ஐ வரவேற்றது.
இந்த விமானம் இன்று காலை பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது.
குறித்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொள்ளுப்பிட்டி - பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் பறந்து சென்றுள்ளது.
விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் சம்பிரதாயப்படி நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸிலிருந்து இலங்கை வந்த புதிய ஏர்பஸ் விமானம்; பார்வையிட கொழும்பில் குவிந்த மக்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்கு வரும் முதல் அகலமான விமானமான புதிய ஏர்பஸ் A330-200ஐ வரவேற்றது.இந்த விமானம் இன்று காலை பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது. குறித்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொள்ளுப்பிட்டி - பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் பறந்து சென்றுள்ளது.விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் சம்பிரதாயப்படி நீர் வணக்கம் செலுத்தப்பட்டது. இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.