யாழ்ப்பாணம் - பலாலி வீதி புன்னாலைக்கட்டுடன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இராணுவ வாகனத்தின் பின்னால் வந்த லொறி ஒன்று,
இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை பலாலி பக்கம் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு முதியவர்களே படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த முதியவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முந்தி செல்ல முயன்ற லொறியில்சிக்கிய மோட்டார் சைக்கிள்; யாழில் இரு முதியவர்கள் படுகாயம் யாழ்ப்பாணம் - பலாலி வீதி புன்னாலைக்கட்டுடன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவ் விபத்து நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இராணுவ வாகனத்தின் பின்னால் வந்த லொறி ஒன்று,இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை பலாலி பக்கம் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு முதியவர்களே படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்த முதியவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.