• Apr 21 2026

சம்மாந்துறை பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை!

shanu / Mar 18th 2026, 2:23 pm
image

 தனியன்  யானை ஒன்று  அத்துமீறி  நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை சலாம் பள்ளிவாசல் வீதி   மக்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள்  வளவு  வாழைத்தோட்டங்கள் மட்டுமன்றி  சில வீடுகளின் சுவர்களையும் உடைத்து சேதப்படுத்தியதாக குறிப்பிட்டனர்.


மேலும்  அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இன்மையினால்  மக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டதுடன்  அதிகாலை 5 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளன.


இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும்  இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை  தனியன்  யானை ஒன்று  அத்துமீறி  நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை சலாம் பள்ளிவாசல் வீதி   மக்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள்  வளவு  வாழைத்தோட்டங்கள் மட்டுமன்றி  சில வீடுகளின் சுவர்களையும் உடைத்து சேதப்படுத்தியதாக குறிப்பிட்டனர்.மேலும்  அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இன்மையினால்  மக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டதுடன்  அதிகாலை 5 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளன.இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும்  இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement