யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் 119 அவசர அழைப்பு பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த 29 வயதுடைய பாலச்சந்திரன் சசிராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பொலிஸாரின் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு நபரொருவர் நேற்று சனிக்கிழமை இரவு அழைப்பினை மேற்கொண்டு, குடும்ப தகராறு என கூறி அவசரமாக பொலிஸாரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடமாடும் (மொபைல்) சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழு, தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட வீட்டின் முகவரியை கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு பொலிஸார் சென்ற வேளை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதாக நம்பப்படும் இளைஞன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டமையை அடுத்து,
அம்பியூலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுத்து, இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
எனினும், குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தவர் மரணம் யாழில் நடந்தது என்ன யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் 119 அவசர அழைப்பு பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த 29 வயதுடைய பாலச்சந்திரன் சசிராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பொலிஸாரின் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு நபரொருவர் நேற்று சனிக்கிழமை இரவு அழைப்பினை மேற்கொண்டு, குடும்ப தகராறு என கூறி அவசரமாக பொலிஸாரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடமாடும் (மொபைல்) சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழு, தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட வீட்டின் முகவரியை கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர். அங்கு பொலிஸார் சென்ற வேளை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதாக நம்பப்படும் இளைஞன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டமையை அடுத்து, அம்பியூலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுத்து, இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்