• Jun 01 2025

ஒட்டுசுட்டானில் தேனீ கொட்டியதில் 63 பேர் பாதிப்பு; நேரடியாக நிலமைகளை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி

Chithra / May 30th 2025, 9:43 pm
image


முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இன்று  தேனீக்கொட்டிற்கு இலக்காகி 63இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார்.

அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை நேரடியாகச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய, பாடசாலைக் கட்டடத்தொகுதியிலிருந்த பப்பரக்கொப்பான் எனும் தேனீக்கூடு, தற்போது வீசிவரும் கடுமையான காற்றினால் உதிர்ந்து வீழ்ந்தமையினால், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.

இதனால் பாடசாலையில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 63இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிலே 45வரையான மாணவர்களும், சில ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இருமாணவர்களும், ஒரு ஆசிரியருமாக மூவர் மிக மோசமாக தேனிக் கொட்டிற்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தேறியுள்ளதாகவும், எதுவித உயிர்  பாதிப்புக்களும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் அறிந்தவுடன் உடனடியாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலை மற்றும், முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலைக்கு விரைந்து அங்கு சிகிச்சைபெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்வையிட்டதுடன், நிலமைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். அத்தோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களையும் பார்வையிட்டார்.

அத்தோடு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திற்கும் நேரடியாகச் சென்று அங்குள்ள நிலமைகளையும் பார்வையிட்டதோடு, பாடசாலைச் சமூகத்தினரோடும் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார்.

குறிப்பாக ஒட்டுசுட்டான் மாகாவித்தியாலய கட்டடங்களில் காணப்படும் தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஏற்கனவே பாடசாலைச் சமூகம் கடந்த 02.09.2024 ஆம் திகதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தும் குறித்த தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் பாடசாலைச்சமூகம் முறையிட்டிருந்தது.


இந்நிலையில் பாடசாலைச் மூகத்தினரிடமிருந்து  கடிதத்தின் பிரதிகளைப்பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சென்று, பாடசாலை மாணவர்களின் உயிருடன் விளையாடவேண்டாமென வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை மிகக் கடுமையாக எச்சரித்தார். அத்தோடு பாடசாலைச் சமூகத்தால் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்தும் கேள்வி எழுப்பியுமிருந்தார்.

அதேவேளை உடனடியாக பாடசாலைக் கட்டடங்களிலுள்ள தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.


ஒட்டுசுட்டானில் தேனீ கொட்டியதில் 63 பேர் பாதிப்பு; நேரடியாக நிலமைகளை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இன்று  தேனீக்கொட்டிற்கு இலக்காகி 63இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார்.அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை நேரடியாகச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய, பாடசாலைக் கட்டடத்தொகுதியிலிருந்த பப்பரக்கொப்பான் எனும் தேனீக்கூடு, தற்போது வீசிவரும் கடுமையான காற்றினால் உதிர்ந்து வீழ்ந்தமையினால், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.இதனால் பாடசாலையில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 63இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.அதிலே 45வரையான மாணவர்களும், சில ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர்.அதிலும் குறிப்பாக இருமாணவர்களும், ஒரு ஆசிரியருமாக மூவர் மிக மோசமாக தேனிக் கொட்டிற்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தேறியுள்ளதாகவும், எதுவித உயிர்  பாதிப்புக்களும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் அறிந்தவுடன் உடனடியாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலை மற்றும், முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலைக்கு விரைந்து அங்கு சிகிச்சைபெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்வையிட்டதுடன், நிலமைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். அத்தோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களையும் பார்வையிட்டார்.அத்தோடு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திற்கும் நேரடியாகச் சென்று அங்குள்ள நிலமைகளையும் பார்வையிட்டதோடு, பாடசாலைச் சமூகத்தினரோடும் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார்.குறிப்பாக ஒட்டுசுட்டான் மாகாவித்தியாலய கட்டடங்களில் காணப்படும் தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஏற்கனவே பாடசாலைச் சமூகம் கடந்த 02.09.2024 ஆம் திகதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தும் குறித்த தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் பாடசாலைச்சமூகம் முறையிட்டிருந்தது.இந்நிலையில் பாடசாலைச் மூகத்தினரிடமிருந்து  கடிதத்தின் பிரதிகளைப்பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சென்று, பாடசாலை மாணவர்களின் உயிருடன் விளையாடவேண்டாமென வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை மிகக் கடுமையாக எச்சரித்தார். அத்தோடு பாடசாலைச் சமூகத்தால் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்தும் கேள்வி எழுப்பியுமிருந்தார்.அதேவேளை உடனடியாக பாடசாலைக் கட்டடங்களிலுள்ள தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement