நாட்டில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,
நாட்டில் 5.17 மில்லியன் குரங்குகளும், 1.74 மில்லியன் மந்திகளும், 2.66 மில்லியன் ராட்சத அணில்களும் மற்றும் 4.24 மில்லியன் மயில்கள் உள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
வேளாண்மை,கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி காலை 8:00 மணி முதல் 8:05 மணி வரை, ஒருவர் தனது தோட்டம், சாகுபடி நிலம், புனித இடங்கள் மற்றும் பிற பொது இடங்களை 5 நிமிடங்கள் கண்காணித்து, அந்த நேரத்தில் வளாகத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள், தரை அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, தொகை கணக்கெடுப்பு தாளில் பதிவு செய்தனர்.
இந்த தேசிய விலங்கு கணக்கெடுப்பு கிராம அலுவலர்களின் தலைமையில், சமுர்த்தி மேம்பாட்டு அதிகாரிகள், பொருளாதார மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 5.17 மில்லியன் குரங்குகள்- வெளியானது விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை. நாட்டில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டில் 5.17 மில்லியன் குரங்குகளும், 1.74 மில்லியன் மந்திகளும், 2.66 மில்லியன் ராட்சத அணில்களும் மற்றும் 4.24 மில்லியன் மயில்கள் உள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.வேளாண்மை,கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி காலை 8:00 மணி முதல் 8:05 மணி வரை, ஒருவர் தனது தோட்டம், சாகுபடி நிலம், புனித இடங்கள் மற்றும் பிற பொது இடங்களை 5 நிமிடங்கள் கண்காணித்து, அந்த நேரத்தில் வளாகத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள், தரை அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, தொகை கணக்கெடுப்பு தாளில் பதிவு செய்தனர்.இந்த தேசிய விலங்கு கணக்கெடுப்பு கிராம அலுவலர்களின் தலைமையில், சமுர்த்தி மேம்பாட்டு அதிகாரிகள், பொருளாதார மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.