யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபை நடாத்திய 103 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமை உரை, போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களின் பேச்சுகள், கூட்டுறவாளர் உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.
அதன்பின்னர் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சு ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. பின்னர் மேற்படி போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய கூட்டுறவு நிறுவனங்களின் அங்கத்தவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 103வது கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மைதான நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும், சிங்களக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ச்சியாக கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த ஊழியர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் கி.சந்திரசேகரன் கூட்டுறவு சபையினர், கூட்டுறவு பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழில் 103 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபை நடாத்திய 103 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமை உரை, போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களின் பேச்சுகள், கூட்டுறவாளர் உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன. அதன்பின்னர் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சு ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. பின்னர் மேற்படி போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய கூட்டுறவு நிறுவனங்களின் அங்கத்தவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 103வது கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மைதான நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும், சிங்களக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ச்சியாக கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த ஊழியர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் கி.சந்திரசேகரன் கூட்டுறவு சபையினர், கூட்டுறவு பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.